
கருப்பு வெள்ளை கணவினில் வந்தாய்
கண்கள் மூடி காதல் சொன்னாய்
மெள்ள மெள்ள புருவம் உயர்த்தி .
சின்ன சிரிப்பில் என்னை கொன்றாய்.
மதி மயங்கும் மாலை நேரம்
மழை பொழியும் ஜன்னலின் ஓரம்
அருகில் வந்தேன்
விலகி சென்றாய்
ஐயோ என் மனதில் பத்திகிச்சி மோகம்
யாரும் இல்ல உலகம் செல்வோம்
இரவு பகலும் காதல் செய்வோம்
மல்லி பூவின் மகரந்த வாசம்
அன்பே உந்தன் வியர்வையில் வீசும்
வாரம் ஐந்து நாள் வாழ்கையின் பிடியில்
மீதம் இரண்டு நாள் உந்தன் மடியல்
உன்னை ரசிபேன், உணவாய் ருசிபேன்
கண்ணே உந்தன் நிழலாய் இருப்பேன்
இடியும் மின்னலும் வரும் பொழுது
என்னை நீ கட்டி அணைக்கும் நாடகம் ரசித்தேன்
இருட்டில் எந்தன் கைகளை பிடித்து
நடந்த அந்த நொடிகளை ரசித்தேன்
என்னை விலகி நீயும்
தள்ளி சென்றால் பதறி போகும் எந்தன் நெஞ்சம்.
கவலை என்னை சூழும் பொழுது
உந்தன் மடியே என்னக்கு தஞ்சம் .
கருப்பான என் தேகத்திலே
சிறப்பாக நீ கொடுத்த முத்தம்
நெருப்பாக மாறுதடி
அய்யோ அய்யோ தூக்கம் போனதடி.
உனை போல் ஒரு பூவை
இதுவரை உலகம் கண்டதில்லை
அப்படி பலரும் கண்டு இருந்தால்
உன்னை போல் எவளும் மனதில் நின்றதில்லை.
நீ தனியாய் இருக்கும் அறையினில் நுழைவேன்
பூனை போல மெதுவாய் நகர்வேன்
கண்ணாடியில் நானும் வருவதை பார்ப்பாய்
இருந்தும் பார்க்காதது போலே நடிப்பாய்
நெருங்கி நானும் உன் அருகினில் வருவேன்
அன்பை உந்தன் பின்னால் இருந்து
உன்னை நானும் கட்டி அணைப்பேன்
கொடுத்த முத்தங்கள் கணக்கில் இல்லை
இதில் வரவு செலவு பார்ப்பதும் இல்லை
இன்று முதல் புது கணக்கு வகுப்போம்
ஒவ்வவொரு நாளும் ஒரு லட்சம் தொடுவோம்
தோள்கள் சரிந்த முதுமையிலும்
தேவதை பெண்ணே, உன்னை மட்டும் ரசிப்பேன்
முதுமையில் எதை நான் மறந்தாலும்
அந்த ஒரு லட்சம் கணக்கை, நானா மறப்பேன்.
மரணம் நெருங்கும் நேரத்திலும்
அன்பே, தினம் புதிதாய் உன்னை காதலிப்பேன்
அன்பே நீ முதலில் இறந்தால்
தள்ளி கொஞ்சம் இடம் விடு படு
அங்கும் உன் அருகினில் நானே இருபேன்.
-- ச.சுரேந்திரன்
கண்கள் மூடி காதல் சொன்னாய்
மெள்ள மெள்ள புருவம் உயர்த்தி .
சின்ன சிரிப்பில் என்னை கொன்றாய்.
மதி மயங்கும் மாலை நேரம்
மழை பொழியும் ஜன்னலின் ஓரம்
அருகில் வந்தேன்
விலகி சென்றாய்
ஐயோ என் மனதில் பத்திகிச்சி மோகம்
யாரும் இல்ல உலகம் செல்வோம்
இரவு பகலும் காதல் செய்வோம்
மல்லி பூவின் மகரந்த வாசம்
அன்பே உந்தன் வியர்வையில் வீசும்
வாரம் ஐந்து நாள் வாழ்கையின் பிடியில்
மீதம் இரண்டு நாள் உந்தன் மடியல்
உன்னை ரசிபேன், உணவாய் ருசிபேன்
கண்ணே உந்தன் நிழலாய் இருப்பேன்
இடியும் மின்னலும் வரும் பொழுது
என்னை நீ கட்டி அணைக்கும் நாடகம் ரசித்தேன்
இருட்டில் எந்தன் கைகளை பிடித்து
நடந்த அந்த நொடிகளை ரசித்தேன்
என்னை விலகி நீயும்
தள்ளி சென்றால் பதறி போகும் எந்தன் நெஞ்சம்.
கவலை என்னை சூழும் பொழுது
உந்தன் மடியே என்னக்கு தஞ்சம் .
கருப்பான என் தேகத்திலே
சிறப்பாக நீ கொடுத்த முத்தம்
நெருப்பாக மாறுதடி
அய்யோ அய்யோ தூக்கம் போனதடி.
உனை போல் ஒரு பூவை
இதுவரை உலகம் கண்டதில்லை
அப்படி பலரும் கண்டு இருந்தால்
உன்னை போல் எவளும் மனதில் நின்றதில்லை.
நீ தனியாய் இருக்கும் அறையினில் நுழைவேன்
பூனை போல மெதுவாய் நகர்வேன்
கண்ணாடியில் நானும் வருவதை பார்ப்பாய்
இருந்தும் பார்க்காதது போலே நடிப்பாய்
நெருங்கி நானும் உன் அருகினில் வருவேன்
அன்பை உந்தன் பின்னால் இருந்து
உன்னை நானும் கட்டி அணைப்பேன்
கொடுத்த முத்தங்கள் கணக்கில் இல்லை
இதில் வரவு செலவு பார்ப்பதும் இல்லை
இன்று முதல் புது கணக்கு வகுப்போம்
ஒவ்வவொரு நாளும் ஒரு லட்சம் தொடுவோம்
தோள்கள் சரிந்த முதுமையிலும்
தேவதை பெண்ணே, உன்னை மட்டும் ரசிப்பேன்
முதுமையில் எதை நான் மறந்தாலும்
அந்த ஒரு லட்சம் கணக்கை, நானா மறப்பேன்.
மரணம் நெருங்கும் நேரத்திலும்
அன்பே, தினம் புதிதாய் உன்னை காதலிப்பேன்
அன்பே நீ முதலில் இறந்தால்
தள்ளி கொஞ்சம் இடம் விடு படு
அங்கும் உன் அருகினில் நானே இருபேன்.
-- ச.சுரேந்திரன்
No comments:
Post a Comment