Friday, October 11, 2013

ஈழம் மலரும் - நாளை தமிழாலும்


This is something about my tamil fellow mens...

அகதி

செம்மண்ணு பூமியில செங்குருதி வடியுதா ?
அந்த எடம் இந்த இடம் மயானமா மாறுதா ?
படைச்சவன் கணக்கு, எனக்கு புரியல
இனி அவன பழிக்க, எனக்கு ஒண்ணுமில்ல.
தாய் பூமி பாசத்தால, மண்ணு தின்னு நான் வளத்தேன்
பெத்தவள , பெத்தவன இன்று மண்ணுதின்ன கொடுத்துட்டனே

நான் பொறந்த நேரம் சரில்லையா
இங்கு வாழ எனக்கு வழி இல்லையா
இந்த வாழ்கை எனக்கு புடிக்கல
எனக்கு ஒண்டி பொழைக்க தெரியல

பிறந்த பூமியில அடிமையா என்ன வெச்சான்
பிழைக்க இங்க வந்தா , அகதின்னு சொல்ல வெச்சான்
பூமியல எங்கெங்கோ புள்ள குட்டி பொறக்குது
பொறந்த மறு கணம் தான் தொப்புள் கொடி அருகுது .

நான் பொறந்த பூமியல அந்த கதை நடக்கலயே
இரத்தம் குடிக்கும் அவனுகள , எந்த சாமியும் தடுகலயே
தாய் குருவி வயித்துக்குள்ள கன்னி வெடி ஒளிச்சி வெச்சான்
சேய் குருவி பொறக்கும் முன்னே வயித்த கிழிக்க வெச்சான்

தமிழ் என்ற வார்த்தைக்குள்ள மாயம் ஒன்னு இருக்குது
திரும்ப திரும்ப சொல்லும்போது வீரம் எனக்கு பொறக்குது
அடிமையா வந்தவன் எல்லாம் ஆண்டவனா மாறிபோனான்
அரசனா இருந்த ஜனம், இப்போ அகதியா மாறிபோச்சே.

பாழ போன பூமியல நாங்க இல்லா நாடேயில்ல
மூத்த குடிமக்களுக்கு தணி ஓரு நாடேயில்ல
அடிமேல அடி கொடுத்து தாய் நாட்டை மீட்டெடுபோம்
வாழ்தாலும் செத்தாலும் தாய் நாட்டில் நாம் இருப்போம்.
-- ச.சுரேந்திரன்


 

No comments:

Post a Comment