Monday, October 14, 2013

தோழர் தியாகுவை கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளார். யாரும் அவரை எளிதில் பார்க்க முடியாதவாறு செய்து விட்டது அரசு. இந்நிலையில் தோழர் தன்னுடைய உண்ணா நிலையை கைவிட மறுத்து விட்டார் . சிறை சென்றாலும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அறிவித்து விட்டார் தோழர் . அடுத்தடுத்த போராட்டங்கள் தமிழக அரசியல் வாதிகள் , இயக்கத் தோழர்கள், மாணவர்கள் கைகளில் தான் உள்ளது . தோழரின் உயிரை காப்பாற்ற தலைவர்கள் ஒன்றாக வேண்டும்.

காவல்துறை உயர் அதிகாரிகள் போராட்டப் பந்தலுக்கு வந்து தோழர் தியாகுவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். ’அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். அவர் உடல் நிலையில் உங்களைக் காட்டிலும் எங்களுக்கு அதிக அக்கறை உண்டு. இது ஒரு போராட்டம். இதற்கு இந்தி"(தீ)ய ஒன்றியம் பதில் சொல்ல வேண்டும்’, என்று போராட்டக் குழுவினரும், தோழர்களும் தெரிவித்தார்கள்.

ஏற்கெனவே, அக்.7-ம் நாள் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அக்.11 அன்று மேலிட உத்தரவுப்படி, அன்று வெளியே செல்லும்படி சொன்ன போது உங்க அக்கறை எங்கே போச்சு, என்று தோழர்கள் கேட்டதற்கு காவல்துறையிடம்  பதில் இல்லை?????

மீண்டும் மருத்துவமமைக்கு வரப் போவதில்லை என்று தோழர் தியாகு தெரிவித்தார்.

இதற்கிடையில், போராட்டப் பந்தலில் காவல்துறை குவிப்பை அறிந்த தோழர்கள் போராட்டப் பந்தலில் குவிந்தனர். இராசிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவர்கள் குழு தோழர் தியாகுவை பரிசோதனை செய்தது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று மருத்துவர் வற்புறுத்தினார். ’அதற்கு அவசியமில்லை. எங்கள் மருத்துவர் தினமும் பரிசோதனை செய்கிறார்.

தேவைப்பட்டால், நாங்களே அவரை அழைத்து வருகிறோம் என்று போராட்டக் குழுவினரும், தோழர்களும் தெரிவித்தனர். ஆனால், அவரை விட்டு செல்ல முடியாது. உடனடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர் தொடர்ந்து வற்புறுத்தினார்.
தொடர்ந்து காவல் துறை விடாப்பிடியாக நின்றது. காவல் துறையினர் குவிந்து கொண்டிருந்தனர். பகுதியில் உள்ள கடைகளை அடைக்க வைத்துவிட்டனர். மருத்துவர் வாசுதேவன் சாலையில் தடுப்புகளைப் போட்டு யாரும் உள்ளே நுழையாதபடி தடுத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தோழர் தியாகுவும் போராட்டக் குழுவினரும்ஆலோசனை நடத்தினர். முடிவில், தோழர் தியாகு மருத்துவமனைக்கு செல்வதென்றும், அவர் மருத்துவமனையில் இருந்தாலும் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்வதென்றும் அறிவித்தனர்.

-இளையவேந்தன்

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

No comments:

Post a Comment