ஏற்கெனவே, அக்.7-ம் நாள் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அக்.11 அன்று மேலிட உத்தரவுப்படி, அன்று வெளியே செல்லும்படி சொன்ன போது உங்க அக்கறை எங்கே போச்சு, என்று தோழர்கள் கேட்டதற்கு காவல்துறையிடம் பதில் இல்லை?????
மீண்டும் மருத்துவமமைக்கு வரப் போவதில்லை என்று தோழர் தியாகு தெரிவித்தார்.
இதற்கிடையில், போராட்டப் பந்தலில் காவல்துறை குவிப்பை அறிந்த தோழர்கள் போராட்டப் பந்தலில் குவிந்தனர். இராசிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவர்கள் குழு தோழர் தியாகுவை பரிசோதனை செய்தது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று மருத்துவர் வற்புறுத்தினார். ’அதற்கு அவசியமில்லை. எங்கள் மருத்துவர் தினமும் பரிசோதனை செய்கிறார்.
தேவைப்பட்டால், நாங்களே அவரை அழைத்து வருகிறோம் என்று போராட்டக் குழுவினரும், தோழர்களும் தெரிவித்தனர். ஆனால், அவரை விட்டு செல்ல முடியாது. உடனடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர் தொடர்ந்து வற்புறுத்தினார்.
தொடர்ந்து காவல் துறை விடாப்பிடியாக நின்றது. காவல் துறையினர் குவிந்து கொண்டிருந்தனர். பகுதியில் உள்ள கடைகளை அடைக்க வைத்துவிட்டனர். மருத்துவர் வாசுதேவன் சாலையில் தடுப்புகளைப் போட்டு யாரும் உள்ளே நுழையாதபடி தடுத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தோழர் தியாகுவும் போராட்டக் குழுவினரும்ஆலோசனை நடத்தினர். முடிவில், தோழர் தியாகு மருத்துவமனைக்கு செல்வதென்றும், அவர் மருத்துவமனையில் இருந்தாலும் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்வதென்றும் அறிவித்தனர்.
-இளையவேந்தன்
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
No comments:
Post a Comment