
கதிர்வீச்சு மழை பொழிந்தது, ஏரியெங்கும் ஆறெங்கும் வயலெங்கும் பெரும் பெரும் கட்டிடங்கள் எங்கும் அதன் வீச்சு பாய்ந்தது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் 1500 கி.மீட்டருக்கு அப்பால் கடந்த கதிர்வீச்சின் அளவு கண்டறியப்பட்டது. அப்பனி கண்டமே அதிர்ந்தது. மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் 36 மணி நேரத்துக்குப் பின்னர் வெளியேற்றப்பட்டனர். முப்பது கிலோமீட்டர் சுற்றளவு பிரதேசம் கதிர்வீச்சு வலயமாக மாற்றப்பட்டது. ‘நாம் கதிர்வீச்சால் தாக்கப்பட்டுள்ளோம்’ என்பதைப் பதினைந்து நாட்களுக்குப் பின்னரே அதிகாரப்பூர்வமாகச் சொன்னார் அந்நாட்டின் அதிபர்.
வெளியேற்றப்பட்ட மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாரிசுகள் கால் வீங்கி, கைப் புடைத்து, தலைச் சாய்ந்து, வயிறு உப்பிபுது புது விதமாக உருவங்களற்றவைகளாகப் பிறந்தது, பிறந்து கொண்டிருக்கின்றது. இதற்கெல்லாம் காரணமான அணு உலை விபத்துக்கு முப்பது மாதங்களுக்குப் பின்னர் கூடங்குளம் அணு உலை திட்டம் 1988ஆம் ஆண்டு நவம்பர் 20ல் ‘அணுக்கழிவை எங்கள் நாட்டுக்குக் கொண்டு வரக்கூடாது’ என்ற நிபந்தனையோடு கையெழுத்தானது.
அன்றைய "இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் பிரதமர் ராசீவ் காந்தி இதற்கு ஒப்புதல் கையெழுத்திட்டான்.
அந்த நாடு ரசுயா. அந்தக் கதிர்வீச்சு பிரதேசம் செர்னோபில். செர்னோபில் அணு உலை விபத்தின் போதும் இந்தியாவுடனான அணு உலை ஒப்பந்தத்தின் போதும் ரசுயாவின் அதிபராக இருந்தவர், ‘மைக்ஹைல் கோர்பாசேவ்’.
செர்னோபில் அணு உலை விபத்துக்குப் பின்னர் ‘கதிர்வீச்சு மழை’ பெய்தது, அணு உலை வெடித்ததால் அல்ல. அணு உலை வெடித்ததை ரசுய அரசு மக்களுக்குச் சொல்ல மறைத்து செயற்கை மழையை உண்டாக்கியதால். இன்று செர்னோபில் இயற்கையை தின்ற நகரம். இன்னும் 25,000 ஆண்டுகளுக்கு செர்னோபில் அணுவின் விஷத் தன்மையோடேதான் இருக்கும்.
எதிர்காலங்களையே விசத்தன்மை மிக்கதாய் மாற்றும் பாதை,’ நாம் மீண்டும் அடிமையாகாமல் இருப்பதற்கான பாதை, இதில் செல்லவில்லை என்றால் "இந்தி"(தீ)ய ஒன்றியம் மீண்டும் ஒருமுறை இழப்பைச் சந்திக்கும். அணுசக்திப் புரட்சி நமக்கான தேவை’ என்ற சாரத்தில் தன் உரையை 1957ஆம் ஆண்டு "இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் முதல் அணு உலையான தாராப்பூர் அணு உலையை (இங்கிலாந்து உதவியோடு) தொடங்கியபொழுது சவகர்லால் நேரு பேசினான்.
அன்று "இந்தி"(தீ)ய ஒன்றியத்தை எடுத்த அணுக் கொள்கை செர்னோபில் உலை வெடிப்புக்குப் பின்னும் தகராமல், இன்று "இந்தி"(தீ)ய ஒன்றியத்தை அறிவியல் பாசிசத்துக்குள் உருப்பெற வைத்துள்ளது.
இந்த அறிவியல் பாசிசத்தை எதிர்த்தே இன்று இடிந்தகரை போராடுகிறது. அந்த இடிந்தகரையின் மீது இந்திய அரசு அதிகாரப் போரைக் தொடுத்து அம்மக்களை தேசத்துரோகிகளாகத் சித்தரிக்கிறது. ‘அகிம்சை வழியில் போராடும் மக்களின் மீது வழக்குகளைப் போடுவது தவறு, வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் வழக்குகளை மக்கள் மீது குவிக்கிறது அரசும் காவல்துறையும்.
மார்ச் 19,2012 சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரை ‘போராடும் மக்களோடு இருப்பேன், உங்களில் ஒருத்தியாக இருப்பேன்’ என்ற தமிழக முதல்வர் சயலலிதாவுக்கு மார்ச் 19 வெற்றி கிட்டப் போகிறது என்னும் யோசனை வந்ததும் அணு உலைக்கு எதிரான தன் நிலையை மாற்றிக் கொண்டாள்.
சொந்த நாட்டு மக்களின் மீது தங்கள் நாட்டின் வளங்களை சந்ததிகளைக் காக்கப் போராடும் மக்களை ‘காவல்துறை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, ரேபிட் தாக்குதல் படை, கமாண்டோ படையோடு விமானத்தின் வழியே மிரட்டி ’பணிந்திடச் சொல்கிறது. ஆனால் மக்கள் பணிய மறுப்பதைத் தொடர்ந்து அரசுப் போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது.
சாலைத்திட்டம், வீட்டுத் திட்டம், மின் திட்டம், மருத்துவத் திட்டம் இப்படி வாழ்வாதாரத்துக்குத் தேவையான அனைத்து திட்டங்களும் ‘கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின் நிதியில்தான்’ செய்யப்படும் என்கிறது அரசு. கட்டுப்பாட்டு பிரதேசமாகப் போராட்டக் கிராமம் மாற்றப்பட்டு இருக்கிறது. இது தான் இன்றைய இடிந்தகரை.
இடிந்தகரை , திருநெல்வேலி மாவட்டத்தின் கடலோர கிராமம். கன்னியாகுமரியிலிருந்து வள்ளித் தெய்வானையை திருச்செந்தூருக்கு விடிவதற்குள் கொண்டுச்சென்றுவிட வேண்டும் என முருகன் பயணமாகிக் கொண்டிருக்க இங்கு வருகிறபொழுதே விடிந்து விட்டதாம்.
ஆதலால் இக்கிராமத்தின் புராணப்பெயர் ‘விடிந்தகரை’, இங்குள்ள லூர்து மாதா ஆலயத்துக்கு எதிரில் உள்ள கோவிலிலும் இப்பெயரே குறிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இயற்கைப்படி இக்கிராமத்தின் கடலோரத்தில் கடல் நீர் அரிப்பால் மணல் திட்டுகளும் கரையோரமும் இடிந்து விழுவதால் ‘இடிந்தகரை’ என்ற பெயரைப் பெற்றதாகக் கூறப்படுகின்றது.
கூடங்குள அணு உலையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் வட்டத்துக்குள் உள்ள இப்படியான இடிந்தகரை கிராமம் இன்று உலகளவில் ‘அணுச் சக்தி எதிர்ப்பின் அடையாளம்‘.
இந்த அணுசக்தி எதிர்ப்பின் அடையாளத்துக்குள் நானும் சில நாட்கள் போராடும் மக்களோடு வாழ்ந்தேன். எதிர்பார்க்காத அன்பு, எந்த வீட்டுக்குச் சென்றாலும் கிடைக்கும் மீன் உணவு என இவற்றோடு இக்கிராமத்தில் தவறாமல் கிடைப்பது ‘அணுசக்தி அபாயத்தின் அறிவுரை’.
“செர்னோபில் விபத்துல ஆயிரம் டன்கான்கிரிட்டு மூடியையே தூக்கியெறிஞ்ச உல பாதுகாப்பானது, நூறு சதம் பாதுகாப்பானது, எந்தக் குறையுமே இல்லாததுன்னு’ அரசு சொல்வதை நாங்க நம்ப மாட்டறோம்னு சொல்றீங்க. நான் ஒண்ணு கேட்கறன்” என தொடர்ந்தார் வயது முதிர்ந்த அம்மா.’ “நீங்கள் டீ பிளாஸ்கில் ஊத்தி வைக்கும் ‘டீ’யோட சூடு கொஞ்ச நேரத்துல எங்கய்யா போகுது. தெரியுமா?”
தெரியாது !
“அப்படி தான்னய்யா கதிர் வீச்சும். உங்க கண்ணுக்குத் தெரியாது. நீங்க கையில பிடிச்சு வைக்க முடியாது. கட்டிடத்துக்குள்ள அடைச்சு வைக்க முடியாது. தண்ணில காத்துல உடம்புல நிலத்துல சீக்கிரம் பரவாது. இந்தக் கதிர்வீச்சகக்கும் உலைய தான்னய்யா நாங்க வேண்டாம்னு சொல்றோம், மின்சாரத்தை வேண்டாம்னு சொல்லல.
"இந்தி"(தீ)ய ஒன்றியத்த்தில் இருக்கிற மொத்த அணு உலையும் வெறும் ரெண்டு வீதம் கூட மின்சாரத்த தயாரிக்கிறது இல்ல. அதுக்கு இவ்வளவு செலவாய்யா. 13,000 கோடி ரூவா செலவாயிடுச்சு செலவாயிடுச்சுனு சொல்றாங்களே எங்க புணத்து மேலையும் நம்ம சந்ததியயும் கொன்னு தான் மின்சாரம் தயாரிக்கணுமா?
அமெரிக்கா கிட்ட பணம் வாங்கிட்டு போராடறம்னு சொல்றங்கய்யா. நீங்க பாருங்க இந்த பந்தல்ல தான் படுத்துக் கிடக்கிறம். எந்த அமெரிக்காக்காரன் எங்களுக்கு பணம் அனுப்பறான், நம்ம கடல, நம்ம நிலத்த, நம்ம பேரக் குழந்தைகள காப்பாத்தறத்துக்கு தான் நாங்க போராடறம்” என்ற அம்மாவின் பேச்சில் அவ்வளவு ஓயாத துடிப்பு.
ஆனால் இப்படி கேட்பது எல்லாம் முட்டாள்தனமான கேள்விகள், அணு உலை பாதுகாப்பானது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இப்படி அணுசக்திக்கு எதிரான துடிப்போடு தொடர்ந்து கொண்டிருக்கும் இடிந்தகரை மக்கள் போராட்டத்தின் 779வது நாள் அக்டோபர் 2 அன்று. போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப.உதயகுமார் பேசும்பொழுது :
“நம்மை நோக்கி பணம், ஆதிக்கம் கொண்ட சுனாமி வந்து கொண்டிருக்கிறது. இவ்வேளை நாம் முக்கிய முடிவை எடுக்க வேண்டிய தருணம் என்பதால் இடிந்தகரையிலிருந்து வெளியேறி தமிழ்நாட்டின் தெருக்களில் அணுசக்தி பற்றிய அபாயத்தை எடுத்துச் செல்வோம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.”
என்றதும் மக்கள் கூட்டத்திலிருந்து தனிக் குரல்கள் ஓங்கின. ‘நீங்கள் உணர்ச்சி வசப்படாதீர்கள். நாம் போராட்டத்தை அடுத்த தளத்துக்கு எடுத்தச் செல்ல வேண்டிய கடமையில் உள்ளோம்‘ என ஆசுவாசப்படுத்தியும் குரல்கள் ஓங்கின.
நீங்கள் ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் இதுதான் என்னுடைய முடிவு. நமக்குள் பிளவு ஏற்படுத்துவதற்காக பணப்பலத்தோடு அதிகாரப் பலத்தோடு அரசு பலத்தோடு பலர் வேலை செய்து கொண்டுள்ளனர். நமக்கு துரோகம் செய்கிறவர்களுக்கும் சேர்த்துதான் நாம் போராடுகிறோம்” என்ற தன் முடிவை அறிவித்ததும் மக்கள் முகங்களில் அவ்வளவு விரக்தி.
இடிந்தகரை போராட்டத்தை பொறுத்தவரையில் குறிப்பாக பெண்கள் சமுதாயம் மேலோங்கிய போராட்டமாக எழுந்தது. இப்படியான போராட்டத்தை அரசு எதிர்பார்த்திடாத ஒன்றாக அமைய இப்போராட்டத்தை நசுக்க அணுஉலை நிர்வாகம் பணம், சாதி, மதம் என பிளவுகளை உண்டாக்க முனைந்தது.
ஆனால் இன்று தாது மணல் நிறுவனங்கள் பெயரில் அரசு கச்சிதமாகப் பிளவை உண்டாக்கி வருகிறது. அணு உலைக்கு எதிரான கூத்தங்குளி பொது மக்களை ஊரைவிட்டு வெளியேற்றி தாது மணல் நிறுவனத்திற்கு ஆதரவாக காவல்துறை அக்டோபர் 2ஆம் தேதி கூத்தங்குளிக்குள் நுழைந்துள்ளது.
இது ஒட்டுமொத்த கடலோர சமுதாயத்துக்கும் மிகப்பெரிய பின்னடைவு” என்கிறார் சுப.உதயகுமார்.
இந்த பிளவுக்கான அடிப்படை ‘மணல் அரசியலும் அணு அரசியலும்‘ தான். அணு அரசியலின்படி, ‘அணு உலை மின்சாரத்துக்கு அவசியம், அணுசக்தி வல்லரசுக்கான அடையாளம் என்கிறது அரசு. ஆனால் அணுக் கழிவு எவற்றுக்கான மூலாதாரம் என்பதைச் சொல்ல மறுக்கிறது, மறக்கிறது.
‘அணுக்கழிவு டப்பாவில் அடைத்து விடும் சிறிய அளவு தான்’ என்கிறது. ஆம் சிறிய அளவுதான், அணுவும் அளவில் சிறியது. ஆற்றலில் பிரம்மாண்டமானதாக உருவெடுத்துதானே மின்சாரத்தை உருவாக்குகிறது. அப்படிபிரம்மாண்ட மானதாக உருவெடுத்த ஆற்றலின் கழிவு, உயிர் கொல்லிகளாகத் தானே இருக்கும்.
- அணு கசியும்...
“இந்தி”(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
http://www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
-இளமாறன்
No comments:
Post a Comment