
தோழர் தியாகுவின் உண்ணா நிலைப் போராட்டம் 11 வது நாளாக தொடர்கிறது. தோழரின் போராட்டம் , மற்றும் அதை ஒட்டி தமிழகமெங்கும் நடக்கும் தொடர் போராட்டங்களை குறித்து எந்த செய்தியும் அச்சு ஊடகத்தில் வராதவாறு அரசு பார்த்துக் கொண்டுள்ளது.
தற்போதைக்கு முகநூல் வழியே தான் செய்தி பரவி வருகிறது. இப்போது கீழ்ப்பாக்கம் அருகில் உள்ள தொழிற்சங்க கட்டிடத்தில் போராட்டம் தொடர்வதால் காவல்துறை நெருக்கடி ஏதும் இல்லை . எனினும் அவரை காவல் துறை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் எனத் தெரிகிறது .
வெற்றி அல்லது வீரச் சாவு என்ற முழக்கத்தோடு இன்னும் தோழரின் போராட்டம் தொடர்கிறது . 73 கிலோ எடை இருந்த தோழரின் தற்போதைய எடை 65 க்கு வந்து விட்டது.
-இளையவேந்தன்
No comments:
Post a Comment