Monday, October 14, 2013

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தலில் நிற்பதற்கான அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் முறையாக தமிழர் என்ற இனம் சார்ந்த அடையாளத்துடன் ஒரு பெரிய கட்சிக்கு தேர்தல் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் வலிமைக்கு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.





இருப்பாய் தமிழா நெருப்பாய்! இருந்தது போதும் இதுவரை செருப்பாய்! இருப்பாய் தமிழா நெருப்பாய்!

இத்தனை ஆண்டுகள் தமிழர் நாட்டில் தமிழர் அல்லாத திராவிடர்களே கட்சி நடத்தி , தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்துள்ளனர். தமிழர்களை அரசியலில் மேலே வரமுடியாமலும் , தமிழர் என்ற உணர்வால் ஒன்று சேர முடியாமலும் செய்தனர் திராவிட கட்சிகள் மற்றும் அமைப்புகள்.இப்போது நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் வாய்ப்பு இருந்தாலும், கொள்கை அளவில் சமரசம் செய்யாமல் , தமிழிய கருத்தின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி பயணிக்க வேண்டும் என்பதே என் போன்றாரின் விருப்பம்.

மீண்டும் திராவிட கருத்துகளுக்கு சிறிதும் இடமளிக்காது, திராவிட கருத்தியல் உள்ள இயக்கங்களோடு கூட்டு சேராமல் நாம் தமிழர் கட்சி தனித்துவமான தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும். பல இன்னல்களில் சிக்கித் தவிக்கும் தமிழினத்திற்கு பக்க பலமாக இருந்து தமிழர் உரிமைகளை மீட்க துணை புரிய வேண்டும். நாம் தமிழர் கட்சி தமிழர்களின் கட்சியாக, தமிழர்களுக்கான கட்சியாக மென்மேலும் வளர வேண்டும் என்பதே நம் அவா. தமிழர்களின் இந்த நியாயமான ஆசையை நாம் தமிழர் கட்சி நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். நம்பிக்கை வீண்போகாமல் இருக்க நாம் தமிழர் கட்சி உறுதி பூன வேண்டுகிறோம்.






இளையவேந்தன்




"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

No comments:

Post a Comment