Saturday, October 12, 2013

இன்று சனிக்கிழமை 12/10/13 தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் சென்னை மற்றும் மதுரையில் வணிக நிறுவனங்களில் தமிழில் கட்டாய பெயர் பலகை வைப்பதற்கு பரப்புரை செய்தோம்.

  

சென்னை அயனாவரம், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம் பகுதிகளில் கடைகள் நெருக்கமாக இருக்கும் இடங்களில் தமிழ் பெயர் பலகை பரப்புரை சிறப்பாக நடைபெற்றது. அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் தமிழக அரசின் ஆணையை கொடுத்து தமிழில் பெயர் பலகை வைக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

தமிழில் மிகச் சிறியதாக எழுதியும் ஆங்கிலத்தில் மிகப் பெரியதாக எழுதப்பட்ட கடைகளுக்கும் அறிக்கை கொடுக்கப் பட்டது. தமிழில் தான் பெரிதாக பெயர் இருக்க வேண்டும் என்று அரசு ஆணை சொல்கிறது. தமிழே இல்லாத கடைகளுக்கு விரைவில் தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கு முன்வைக்கப் பட்டது. 

ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் பலகை வைத்துள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை நெருக்கடி கொடுத்துள்ளோம். ஒரு வேளை அவர்கள் மாற்றவில்லை எனில் அடுத்த கட்ட பெயர்பலகை அழிக்கும் போராட்டம் நடத்தப்படும். 

தமிழர் நாட்டில் தமிழில் பெயர் பலகை வைப்பது சட்டம் மட்டுமல்ல நமது கடமையும் கூட என்ற வாசகம் அடங்கிய பாதகை கடைகளின் முன்பு விழிப்புணர்வுக்காக விரித்து காட்டப் பட்டது. இதே போல் மதுரையிலும் தோழர்கள் பல கடைகளுக்கு சென்று தமிழில் பெயர்பலகை வைக்க பரப்புரை செய்தனர். அடுத்து கோவையிலும் இதே பரப்புரை செய்யப்பட உள்ளது. என்ன விலை கொடுத்ததும் நம் தமிழை மீட்போம். வாழ்க தமிழ்!

-இளையவேந்தன்

No comments:

Post a Comment