Sunday, October 13, 2013

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையின் மூலம் பெறப்படும், மழைநீரை முறையாக பயன்படுத்த, காவிரி தொழில்நுட்ப குழு அளித்த, அனைத்து பரிந்துரைகளும், கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால், பருவமழையின் மூலம் பெறப்படும் மழைநீர், வீணாக கடலில் கலக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

௨௦௦௨ இல் மத கலவரம் செய்த பயங்கரவாதி மோடியை தமிழ்நாட்டில் அனுமதிக்காதே - Nicht in die terroristischen Modi Unruhen im Jahr 2002 in Tamil Nadu
தமிழகம் எப்போதும், வடகிழக்கு பருவமழையை நம்பியே இருக்கும். எனவே, தமிழகத்தின் பாசன திட்டங்கள், அதை வைத்தே வரையறுக்கப்படும். ஆனால், அதற்கு நேர்மாறாக, ஒவ்வொரு ஆண்டும், நூற்றுக்கணக்கான டி.எம்.சி., தண்ணீர், கடலில் வீணாக கலந்து வருவது, வாடிக்கையாக உள்ளது.பருவமழையின் மூலம் பெறப்படும் மழைநீரை சேமிப்பதற்கான, முறையான திட்டங்கள் இல்லாததே இதற்கு காரணம்.இப்பிரச்னையை தீர்க்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காவிரி தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியன், தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இக்குழு, வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் வெள்ள நீரை உரிய வகையில் உபயோகப்படுத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வழிமுறைகளை பரிந்துரைத்தது. 13,560 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 12 திட்ட பணிகளை, பரிந்துரை செய்தது.
குறிப்பாக

* 5,166 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் ,

*1,862 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அத்திக்கடவு அவினாசி. வெள்ளக்கால்வாய் திட்டம்.

*250 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பெண்ணையாறு (சாத்தனூர் அணை) பாலாறு இணைப்புத் திட்டம்

*253 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பெண்ணையாறு (நெடுங்கல் அணைக்கட்டு) பாலாறு இணைப்புத் திட்டம்

*1,134 கோடி ரூபாய் மதிப்பில், காவிரி வைகை குண்டாறு, காவிரி (மேட்டூர் அணை) சரபங்கா இணைப்புத் திட்டம்

ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டம், பரிந்துரைக்கப்பட்டது.பரிந்துரை வழங்கி, இரண்டு ஆண்டுகளாகியும் இத்திட்டம், ஆரம்ப பணிகள் கூட துவங்காமல் உள்ளன.

-நாம் தமிழர் திருப்பூர் சமரன்பாலா

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

No comments:

Post a Comment