Showing posts with label விடுதலை எனது பிறப்புரிமை. Show all posts
Showing posts with label விடுதலை எனது பிறப்புரிமை. Show all posts

Monday, November 11, 2013

In rememberance of the sacrifices by Sikh soldiers during the World Wars. 83005 turbaned Sikh soldiers were killed and 109,045 were wounded.



Parnaam Shaheeda Nu.

Sir Winston Churchill was very well conversant with the bravery of the Sikhs, who had fought for Britain in the World Wars.

Churchill while speaking in the British Parliament said:

".....It is a matter of regret that due to the obsession of the present times people are distorting the superior religious and social values, but those who wish to preserve them with respect, we should appreciate them as well as help them. Sikhs do need our help for such a cause and we should give it happily. Those who know the Sikh history, know England's relationship with the Sikhs and are aware of the achievements of the Sikhs, they should persistently support the idea of relaxation to Sikhs to ride a motorbike with their turbans on, because it is their religious privilege."

Churchill, further added:

"...British people are highly indebted and obliged to Sikhs for a long time. I know that within this century we needed their help twice and they did help us very well. As a result of their timely help, we are today able to live with honour, dignity, and independence. In the war, they fought and died for us, wearing the turbans. At that time we were not adamant that they should wear safety helmets because we knew that they are not going to wear them anyways and we would be deprived of their help. At that time due to our miserable and poor situation, we did not force it on them to wear safety helmets, why should we force it now? Rather, we should now respect their traditions and by granting this legitimate concession, win their applaud."

Friday, November 8, 2013



மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .....
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக
்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!
தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !
இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே !
முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !
நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !
தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் ....

Monday, October 28, 2013

இழவுக்கு இழவு குடித்து வெடித்து ஆடி பழகிப்போன தமிழனிடம் வேறென்ன எதிர்பார்ப்போம் நாம் (2009 தீபாவளிக்கு எழுதிய கவிதை இன்றும் பொருந்தும் நிலை)



--தீபாவளி தமிழன்--
மரண வாடைக் கண்டால்
நாய்கள்கூட ஓலமிடும்
தமிழா
நீ உறங்கிக் கொண்டிருந்தாய்
கொத்து கொத்தாய்
கொல்லப்பட்டு கொண்டிருந்த போது
உன் இனம்

துக்கம் தீரவில்லை
மிச்சம் பிழைத்த தமிழன்
சிங்கள சத்தான்
வாயிலிருந்து
இன்னும் மீளவில்லை.
தீபாவளி, ரம்சான், ஈஸ்டர்
பண்டிகைகள்
தமிழகத்தில் குறைவில்லை.

அரசு தீவிரவாதத்தில்
வெடித்து சிதறிய
தமிழன் உடல்கள்
புதைப்பதற்கு
யாருமில்லை
ஈழத்தில்.
பட்டாசு ஆயிரம் வகை
இனிப்பு நூறு வகை
வெடிக்கவும் உண்ணவும்
புத்தாடையில் தீபாவளிக்கு
ஜொலிக்கவும் தயாராய்
ஆறு கோடி தமிழனின் தமிழகத்தில்.

இழவுக்கு இழவு
குடித்து வெடித்து ஆடி
பழகிப்போன தமிழனிடம்
வேறென்ன எதிர்பார்ப்போம்
நாம்
(2009 தீபாவளிக்கு எழுதிய கவிதை இன்றும் பொருந்தும் நிலை)

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

 

பகுத்தறிவு பாடம் ௧ - புகைப்படத்தில் இருப்பது தமிழ் மொழியை நீசபாசை என்று கூறி, வீட்டு வேலைக்காரியிடம் கூட தமிழை பேச வேண்டாம் என்று கூறி.., பின்பு கதிர்வேளர் முன் தமிழ் புலவர்களை இழிவாக பேசியதை கண்டித்து அவன் தந்த பாலை அவன் முன்பே வாந்தியெடுத்து அசிங்கப்பட்டும் திராவிட சொரிநாய்களால் தூக்கி நிறுத்தப்படும் வெங்காய ராமசாமி அல்ல (DO NOT JUDGE A BOOK BY ITS COVER)

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது) 
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிசுணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விசுணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விசுணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8. விசுணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விசுணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விசுணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிசமகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் சோதிசா என்று சொல்லப்படுகிறது.

இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுசாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காசுநானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

தீபாவளிப் பண்டிகை என்று இன்பமும், துன்பமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன். தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும். அதாவது விசுணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விசுணு கடவுள் நரகாசுரனைக் கொன்றராம். இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள். விசுணுக் கடவுள் பூமியைப் புணரமுடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள்.

இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு துன்பம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு????????

எதையுமே நம்பாத சில பகுதரிவாதிகளுக்காக நாம் சில சான்றுகளை பார்ப்போம்!!!!!

தீபாவளி தமிழர்களின் பண்டிகை அல்ல...
தீபாவளி கதையை எடுத்து கொண்டால் நராகசூரன்னை [அசுரனை] கொன்றதாகத்தான் கூற படுகின்றது .அசுரர்கள் ,அரக்கர்கள் ,தஸ்யுக்கள் ,ராட்சதர்கள் ,குரங்குகள் ,கரடிகள் ,என்று சொல்லபடுவர்கள் எல்லாம் யார் ??வரலாற்று பேராசிரியர்கள் என்ன சொல்கின்றனர் என்று பார்ப்போம் 

''தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியர் அல்லாதவர்களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் ராமாயண கதையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது [ரோமேஷ் சந்திர தத் எழுதிய ''புராதன இந்தியா ''என்னும் நூல் பக்கம் 52]

ராமாயண கதை என்பது ஆரியர்கள் ,தென் இந்திய தஸ்யுக்கள் or தமிழர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதை சித்தரித்து காட்டுவதாகவும் '' 
[சிதம்பரம் பிள்ளை எழுதிய 'திராவிடரும் ஆரியரும் ''என்ற நூல் பக்கம் 24]

''தென் இந்தியாவில் இருந்த மக்களே (தமிழர்கள்) தான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் ,அரக்கர்கள் என்றும் அழைக்க பட்டிருகின்றனர் ''
[விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் என்னும் நூலில் ராமாயணம் என்ற தலைப்பில் 587-589 ம் பக்கம் ]

''ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் என்றும் ,தஸ்யுக்கள் ,அசுரர்கள் ,என்றும் கூறபட்டிருக்கின்றது ..ஆரியருக்கும் ,ஆரியரல்லாதவரும் இருந்து கொண்டு இருந்த அடிபடையான பகமையை பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம் .இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும்,அரசியல் வேற்றுமையுமே இந்த பகைமைக்கு காரணம் ''
[டாக்டர் ராதா முகர்ஜி எழுதிய ''இந்து நாகரீகம்''என்னும் நூல் பக்கம் -69].

ராமாயணமும் ,மகாபாரதமும் இந்தோ -ஆரியர் காலத்தையும் அவர்களுடைய வெற்றிகளையும் ,உள் நாட்டு சண்டைகளையும் பற்றி சொல்வதாகும் ..
[ஜவஹர்லால் நேரு எழுதிய ''டிஸ்கவரி ஆப் இந்திய நூல் பக்கம்-76-77]

''இராமாயணம் என்பது தென்இந்தியாவில் ஆரியர் பரவியதை குறிக்கும் ''
[ஜவஹர்லால் நேரு -அதே நூல் பக்கம்-82]

இந்த வரலாற்று உண்மையை அடிப்படையாக தெரிந்து கொண்டால் நாம் கொண்டாடும் பண்டிகைகளில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட அசுரர்கள் எல்லாம் நம் திராவிடர்கள் என்ற பேருண்மை சூரிய ஒளி போல தெரிந்து விடும் ..

நம்மை அழித்தற்காக நாமே விழா கொண்டாடலாமா என்பது தான் கேள்வி .இந்நிலை இப்படியே சென்றால் நாளைய தலைமுறை மே ௧௮ (18) ஐ விழாவாக நாளை தமிழர் கொண்டாடுவர் ????

-புவிநன்

 

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

இனப்படுகொலை ஆதாரங்கள் 

http://www.youtube.com/watch?v=3TeDzggUFkc

 

Friday, October 25, 2013

எமது பலம் எமக்கு இன்னும் புரியலே ஆனால் எதிர்கள் நன்கு புரிந்து உள்ளார்கள் அதனால் தான் தமிழருக்கு என்று ஒரு நாடு வந்து விட கூடாது என்றும் சொந்த மாநிலம் என்றாலும் அதை தமிழன் ஆட்சி செய்ய கூடாது என்பதிலும் எந்த ஊடகம் என்றாலும் தமிழை முன்னுக்கு கொண்டு வர கூடாது என்பதிலும் எமக்குள் இருக்கும் சாதி என்ற நோயை அணைய விடாமல் இருப்பதிலும் மிக கண்ணும் கருத்துமா செயற்பட நாமோ இன்னும் புரிந்தும் புரியாமலும் பிரிந்தே நிக்கறோம்



தற்சமயம் இணையத்தில் 75,000 தமிழ்சார்ந்த வலைத்தலங்கள் இருப்பதாகக் கணிக்கப்படுகின்றது. இதில் 25,000 தலங்கள் முற்றும் முழுவதுமாகத் தமிழையே பயன்படுத்தி ஆக்கப்பட்டுள்ளன. உலகின் முதல் தாய்மொழி என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுள்ள செம்மொழியாம் நம் தமிழ்மொழி, இணையத்தில் தோன்றி உலகை உலாவந்த முதல் இந்திய மொழி என்ற பெருமையையும், மிக அதிகமான இணையத்தலங்களைக் கொண்ட ஒரே "இந்தி"(தீ)ய ஒன்றியத்தின்  மொழி என்ற பெருமையையும், ஆங்கிலத்தைப் பயன்படுத்தி செய்யக்கூடிய அனைத்தையும் செய்யவல்ல ஒரே "இந்தி"(தீ)ய ஒன்றியத்தில் உள்ள மொழி என்ற பெருமையையும் ஒருசேர பெற்றுள்ளது

-நல்லதம்பி யோகநாதன்

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

Sunday, October 20, 2013

தமிழர் பண்பாட்டை புறக்கணித்து ஆரியப் பண்பாட்டை திணிக்கும் தமிழக தொலைக்காட்சிகள்! தமிழக மக்களின் கவனத்திற்கு !



தற்போது பல தமிழ் தொலைக்காட்சிகள் ராமாயணம் மகாபாரதம் போன்ற சமசுக்ரித்த இதிகாச காப்பியங்களை தமிழில் ஒளிபரப்பு செய்கின்றன. இதை வீட்டில் இருக்கும் இல்லத் தரசிகள் முதல் குழந்தைகள் வரை விரும்பிப் பார்கிறார்கள்.

அதற்கு இந்த கதைகளில் வரும் பிரமாண்டங்கள், மாயா சாலங்கள், அதீத கற்பனைகள் காரணமாக அமைந்துள்ளது. குழந்தைகளும் அதற்காகவே பார்கிறார்கள். அதிலும் சுட்டி தொ.கா வில் பல்வேறு வடநாட்டு கற்பனை கடவுளர்களை வெளிநாட்டு பட பாணியில் காக்கும் நாயகர்களாக சித்தரித்து பல இல்லாத கதைகளை உருவாக்கி உயிரோவியமாக (கார்டூன்) உலா விடுகிறார்கள்.

பீமன், அனுமன், கிருசுணன், பிள்ளையார் போன்ற பாத்திரங்களை இவர்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி புதிய புதிய கதைகள் உருவாக்கி சிறுவர்களிடையே திணிக்கிறார்கள். புராணத்தில் கூட சொல்லப் படாத விடயங்களை இதில் காட்டுகிறார்கள். கூடவே இந்த கதைகளில் தமிழர்களுக்கு சற்றும் தொடர்பில்லாத பண்பாடுகளை கற்பிக்கிறார்கள்.

பிராமணன் மட்டுமே சமூகத்தில் உயர்வானவன் என்ற ஏற்றத் தாழ்வுகளை குழந்தைகளிடம் கற்பிக்கின்றனர்.

அனைத்து வடநாட்டு காப்பியங்களும் நால்வருண கோட்பாட்டை மக்களிடையே ஏற்கனவே விதைத்துவிட்ட நிலையில் , இந்த தமிழ் தொலைக்காட்சிகள், வருணாசிரம பேதங்களை மென்மையான முறையில் இந்த காப்பிய கதைகள் மூலமாக மக்களிடம் எடுத்து செல்கின்றன. நால்வருணங்கள் தமிழர்களுக்கு இல்லை என்றாலும் இப்போது இந்த காப்பியக்கதைகள் மூலமாக இந்த பாகுபாட்டை மக்களிடையே எடுத்து செல்கின்றன இந்த பொறுப்பற்ற ஊடகங்கள்.

தமிழ் சித்தர்கள், வள்ளலார் , வள்ளுவர் , ஒளவையார் போன்றவர்கள் இத்தைகைய வடநாட்டு மதங்களில் கூறப்பட்ட வருண பேதங்கள் , ஏற்றத் தாழ்வுகளை கடுமையாக எதிர்த்தே வந்துள்ளனர். இத்தகைய பேதங்களை, தமிழர்களுக்கு ஒவ்வாத பல நெறிகளை மக்களிடம் திணித்து வருகிறது தமிழ் ஊடகங்கள். குடும்ப முறை, சமூக ஒழுக்கம் , அரசியல் நெறிமுறை போன்ற அனைத்து விடயங்களிலும் ஆரியப் பண்பாடு தமிழர் பண்பாட்டிற்கு முற்றிலும் விரோதமானது.

புராணங்கள் என்ற பேரில் காமக் களியாட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்கின்றனர் இந்த ஊடகங்கள். போர் நூலை என்றுமே தமிழர்கள் அறநூலக ஏற்றுக் கொண்டதில்லை.

வள்ளுவமும் அதையே தெளிவாக வலியுறுத்துகிறது. 'தன்னுயிர் நீப்பினும் செய்யற்க' போன்ற குறள்கள் உயிர்களிடத்தில் அன்பு செய்தல் போன்ற அறங்களை மக்களிடம் சென்று சேர்த்தது. ஆனால் ஆரிய காப்பியங்கள் பொறாமை, வஞ்சகம், அழுக்காறு ,அவா , வெகுளி போன்ற தீய சிந்தனைகளை நெஞ்சில் விதைக்கிறது.

ஏன் வடநாட்டு பண்பாட்டை தமிழர்களிடம் திணிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது???

ஏன் தமிழர் நூல்கள் இல்லையா , தமிழர் பண்பாட்டை சித்தரிக்கும் காப்பியங்கள் இல்லையா???

சங்க இலக்கியங்களில் வரும் கதைகள், திருக்குறள் நெறிக் கதைகள், சிலப்பதிகாரம் , மணிமேகலை போன்ற தமிழ் காப்பியங்கள், கடை ஏழு வள்ளல் வரலாறு, பத்தியும் உருக்கத்தையும் ஏற்படுத்தும் பெரியபுராண ஆன்மீகக் கதைகள், சிவனியம் மாலியம் சார்ந்த சைவ வைணவக் கதைகள், தமிழ் சித்தர்கள் வாழ்க்கை வரலாறு, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சமகால புதினங்கள் , தமிழர் பண்பாட்டை சித்தரிக்கும் எண்ணிலடங்கா கதைகள் தமிழில் இருக்கும் போது ஏன் வடமொழியில் எழுதப்பட்ட புனைவுக் கதைகளை தமிழகத்தில் பரப்ப வேண்டும் ?

மேற்கூறிய தமிழர் மெய்யியல், சமூகவியல், வாழ்வியல் கதைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க ஏன் தமிழக தொலைகாட்சிகள் தயங்குகின்றன?

தமிழ் சமூக அக்கறையுடன் இத்தொலைகாட்சிகள் செயல்படுமே என்றால் வடநாட்டு கற்பனை காப்பியங்களின் மூலமாக ஆரியப் பண்பாட்டை தமிழர்களிடையே திணிக்கும் வேலையை தமிழக தொலைக்காட்சிகள் நிறுத்திக் கொள்ளவேண்டும். ஆரிய கதைகள் ஆரியர்களுக்கே உரியது. அதை அவர்கள் மண்ணில் பார்க்கட்டும் ரசிக்கட்டும்.

இந்த முட்டாள்தனம் அவர்களுடன் போகட்டும். நாம் அவற்றை தமிழ் மண்ணில் ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்ன?

தமிழியம் சார்ந்த அறநெறி கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை தமிழ் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் தமிழ்த் தொலைக்காட்சிகள் . ஆரிய இந்துத்வா கொள்கைகளுக்கு இனிமேலும் இடமளிக்காமல் , தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் உயர்ந்த கொள்கைகள் கொண்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முன்வர வேண்டும்.

தமிழ்ப் பெற்றோர்களும் இந்த கருத்தியலை புரிந்து கொண்டு தமிழர் பண்பாட்டிற்கு ஒத்த நெறிகளை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். தாங்களும் இந்த கற்பனை மாயவலைக்குள் வீழ்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

- தமிழர் பண்பாட்டு நடுவம்

முல்லைக் கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா கடற்கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் றோசா உட்பட கடற்புலி போராளிகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.



|| கடற்கரும்புலிகள் பாகம் 06ல் "அலையின் காற்றிலே" எனும் கானம் (லெப் கேணல் அமுதசுரவியுடன் இணைத்து) இவர் வீரம் உரைத்து இசைக்கிறது......

கடலிடை உயிர்பூவைச் சொரிந்த உயிராயுதமாக சென்றவர்கள் இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||

"கருப்பு நாள் சூன் "1"


உலகின் மிகப் பெரிய சர்வாதிகாரி
என்று பெயரெடுத்த இட்லர்கூட
இங்கிலாந்து சென்று தாக்கும் தனது
விமானப் படையினருக்கு, "ஆக்சுபோர்டு
பல்கலைக்கழகத்தின் மீது குண்டு
போடாதீர்கள்' என்று எச்சரித்ததாகத்
தகவல்கள் உண்டு.


ஆனால் மிகப் பழமை வாய்ந்த, ஆசியாவிலேயே
மிகப் பெரிய நூலகம் என்ற
பெருமையை உடைய யாழ்ப்பாண
நூலகம் சிங்கள வெறியர்கள்
தீ வைத்ததில் நூலகத்தில் இருந்த
பழமையும் தொன்மையும் வாய்ந்த
சுமார் 97 ஆயிரம் அரிய
நூல்கள் மற்றும் ஓலைச் சுவடிகள்
எரிந்து சாம்பலாயின.


செய்தீ கேட்டு உலகமே அதிர்ச்சியுற்றது.

அந்த கொடூர நிகழ்வு நடைபெற்றநாள்
1981ஆம் ஆண்டு ஜுன் 1 ஆம்
தேதி.

தமிழா,
வரலாற்றில்
மன்னிக்கவோ
மறக்கவோ
முடியாத
கருப்பு நாள்
இது...!

 

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா???


Thursday, October 17, 2013

பகுத்தறிவென்பது தொல்காப்பியர் காலம் முதலே நமது வாழ்வோடு பின்னிப்பிணைதந்து; எந்த வெங்காயமும் நமக்கு புதுசா பகுத்தறிவு புகட்டத் தேவையில்லை. துரோகத்தை இனம்கண்டு தேசிய தலைவர் வழி நின்று ஆரிய திராவிட கூட்டுக் கலவானிகளை கருவறுப்போம் நாம் தமிழராய்!!!!!!!

1thalaivar 2thalaivar 3thalaivar 4thalaivar 5thalaivar 6thalaivar 7thalaivar 8thalaivar

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-தேன்மொழி

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுவிக்கப்படுகின்ற நாளில் கொலாசியத்தில் தீபம் ஏற்றப்படும்! 16 10 2013



உலகத்தில் எங்காவது ஒரு இடத்தில் மரண தண்டனை ரத்து செய்யப்படுமானால், அந்த கொலாசியம் முழுவதும் தீபங்களால் அலங்கரிக்கப்படும். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுவிக்கப்படுகின்ற நாளில் கொலாசியத்தில் தீபம் ஏற்றப்படும் என்று தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.

ஒரு மனிதன் தூக்கு மேடையில் ஏற்றப்படுகிறான். முகத்தை கறுப்புத் துணியால் மூடுகின்றனர். அவன் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்படுகிறது. பலகை விலக... கயிற்றில் தொங்குகிறான். இரண்டு கால்களும் அந்தரத்தில் ஊசலாடுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. கழுத்து எலும்பு கண் இமைக்கும் நேரத்தில் படக்கென உடைகிறது. சுவாசத்துக்காக ஏங்குகிறான். காற்றை சுவாசிக்க முடியவில்லை. அணு அணுவாக உயிர் கசிய துடிதுடித்துச் சாகிறான்.

தத்ரூபமாக உருவாக்கப்பட்டிருந்த  உயிரியக்கப்படம் (அனிமேசன்) வீடியோவைப் பார்த்த அனைவருக்கும் நெஞ்சம் பதறியது. பார்த்தவர்கள் கண்களில் கண்ணீர் கசிந்தது!

சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு நாளில், பேரறிவாளன் கதையை மையமாக வைத்து 'உயிர் வலி’ என்ற ஆவணப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பிய காட்சிதான் இது.

இந்த ஆவணப் படத்தை இயக்கியவர் பிரகதீசுவரன். விழாவில், மரண தண்டனை பற்றி பேசிய அனைவரது பேச்சும் நெஞ்சத்தை உருக்கியது.

பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தார். அவர் பேசுகையில்,

தொடக்கத்தில் என்னுடைய போராட்டம் தனியாகத்தான் ஆரம்பித்தது. அதன்பிறகு, உண்மையை அறிந்து கொண்டு நிறைய தோழர்கள் குரல் கொடுக்க வந்தாங்க. நான் ஒவ்வொரு முறையும் அறிவை பார்க்கச் சிறைக்குப் போகும்போது, அவன் சோர்ந்து இருந்து ஒருமுறைகூட பார்த்ததில்லை.

எப்போதுமே, முகத்தில் சிரிப்புடனும் நம்பிக்கையுடனும்தான் இருப்பான். செய்யாத குற்றத்துக்காக இவ்வளவு ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டான். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதால்தான் 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடுகிறேன் என்று வருத்தப்பட்டார்.

தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது,

அமெரிக்காவின் டெக்சாசு நகரில் 10 வயது சிறுமியின் தந்தை, கொலைக் குற்றத்துக்காக தூக்கிலிடப்படுகிறார். அதற்குப் பிறகு, அவள் இந்த உலகத்தைப் பார்த்து, 'இன்றைக்கு இன்னொருவரை கொன்றதற்காக இவரை தூக்கில் இடுகிறீர்கள். இவரை நீங்கள் கொன்றதற்காக உங்களில் யாரை நான் தூக்கில் இடுவது?’ என்ற நியாயமான கேள்வியைக் கேட்டாள். இந்தக் கேள்விக்கு யார் பதில் சொல்வது?

தூக்கு மேடைக்கு முன்பாக ஒரு மனிதனுடைய நடவடிக்கைகள் எவ்வாறு உயிருடனும், வாழும் கணத்தோடு நேரடி தொடர்புடனும் இருக்கிறது என்பதற்கு சான்றாக சார்சு ஆர்வெல் எழுதிய 'ஆன் ஆங்கிங்’ என்ற கட்டுரையில் இருந்து சில வரிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.

தூக்கு தண்டனைக்கு ஆளாக்கப்பட்ட மனிதன் நடந்து தூக்கு மேடையை நோக்கி போய்க்கொண்டிருந்தான். அத்தனைக் கண்களும் அவனை கவனித்துக்கொண்டிருந்தன. அதில் நானும் ஒருவன். அவன் நடந்து செல்லும் பாதையிலே, சேரும் சகதியும் அவன் கால்கள் மீது பட்டது.

அவனது கால்கள் அன்னிச்சையாக அதை தவிர்த்துவிட, கொஞ்சம் விலகிச் சென்றான். வாழ்க்கை எனக்கு மிக அபத்தமாகப்பட்டது, அந்த கணத்தில்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் தூக்கில் இடப்போகிற மனிதன் நம்மைப் போலவே அனிச்சையாக சகதியை தாண்டிச் செல்வதும், அந்தக் கணம் வரை இந்த உலகத்தோடு தொடர்பில் இருப்பதும் எனக்குள் ஒருவித நடுக்கத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது.

நம்மைப் போலவே அவன் உடலிலும் இரத்த ஓட்டம் நிகழ்கிறது, அவனது வயிற்றில் செரிக்க வேண்டிய உணவு செரித்துக்கொண்டிருக்கிறது. தூக்கில் இடப்பட்ட பின்பும் சில நொடிகளுக்கு விரல்களில் நகங்கள் வளரும், இப்படி முழுவதும் உயிருடன் இருக்கின்ற ஒருவனை தூக்குக் கயிற்றை முத்தமிடச் செய்வது, மிகப்பெரிய வன்முறை என்பதை உணர்ந்தேன்!’ என்கிறார்.

நீதி என்பது ஒருவருக்கு நீதியாகவும், சிலருக்கு அநீதியாகவும் இருக்கிறது. அதேபோல ஓமன் நகரில் கொலாசியம் என்ற மிகப் பெரிய திறந்தவெளி அரங்கம் இருக்கிறது.

இன்று உலகத்தில் எங்காவது ஒரு இடத்தில் மரண தண்டனை ரத்துசெய்யப்படுமானால், அந்த கொலாசியம் முழுவதும் தீபங்களால் அலங்கரிக்கப்படும். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுவிக்கப்படுகின்ற நாளில் கொலாசியத்தில் தீபம் ஏற்றப்படும்' என்று நம்பிக்கையுடன் முடித்தார்.

திட்டமிட்டு மரணம் நிகழ்த்தப்படுவதுதான் வலி!

நன்றி தமிழ் ஊடகங்கள்

-ஈழ மகான் தமிழ்

 

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

தமிழர்களுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு - சீனாவின் வழியில் சிறீலங்கா



சீனாவில் மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு குழந்தைத் திட்டத்தைக் கொண்டுவந்து, இரண்டாவது குழந்தை பெற்றவர்களுக்கு பெருந்தொகையாகத் தண்டப்பணம் அறவிடுவதுடன், பலரை வலுக்கட்டாயக் கருக்கலைப்புக்கும் உட்படுத்திவருகின்றது.

இதேவேளை, சிறீலங்கா தீவிரவாத அரசோ இன அழிப்பு நோக்குடன் தமிழர்களுக்கு மட்டும் கட்டாயக் கருக்கலைப்புச் செய்து வருகின்றது. இதில் தமிழர் தாயகம், மலையகம் என்று வேறுபாடு காட்டாமல் இந்தக் கொடூரத்தை அரங்கேற்றி வருகின்றது.

கடந்த வாரம் மலையகத்தில் தமிழ்ப் பெண் ஒருவர் கட்டாயக் கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெங்கு பரிசோதனை என்ற பெயரில் கந்தப்பளை கோட்லொட்சு தோட்டத்தைச் சேர்ந்த கோட்டை புசுபராணி என்ற இரு பிள்ளைகளின் தாய்க்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டதால் அப்பெண் அதிக இரத்தப் பெருக்கு ஏற்பட்ட நிலையில் ஐந்து நாட்கள் நுவரெலியா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் கணவரான யோகேசுவரன் இந்த விடயம் குறித்து கந்தப்பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த செப்டெம்பர் 30ம் திகதி தோட்ட நலன்புரி உத்தியோகத்தர் டெங்கு பரிசோதனைக்கு நுவரெலியாவில் இருந்து வைத்திய அதிகாரி முதலாம் திகதி வருவதாகவும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் கட்டாயமாக இந்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமெனவும் அறிவித்தார்.

இதன்படி கோட்லொட்சு தோட்டத்துக்கு வைத்திய அதிகாரி தோட்ட நலன்புரி உத்தியோகத்தர் குடும்ப நல மருத்துவமாது ஆகியோர் முதலாம் திகதி பயணம் செய்துள்ளனர். அந்த தோட்டத்தைச் சேர்ந்த கோட்டை புசுபராணியும் சிகிச்சைக்கு சென்றிருந்தார். இவர் இரண்டு பிள்ளைகளின் தாயாராவார். இவருக்குக் கட்டாய கருத்தடை செய்யப்பட்டுள்ளது. பின்னர் வீடு திரும்பிய புசுபராணிக்குத் தொடர்ந்து இரத்தப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இப்பெண்ணின் கணவர் உடனடியாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியில் புசுபராணி சுயநினைவு இழந்து மயக்கமடைந்துள்ளார்.

நுவரெலிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இப்பெண் ஐந்து நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பின்னர் கடந்த 5ம் திகதி வீடு திரும்பியுள்ளார். பெண்ணின் கணவர் இது குறித்து கந்தப்பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இது குறித்து இதுவரை விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் வழங்கப்படுவதாக அண்மையில் இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மாவட்டத்தின் வேரவில் பிராந்திய அரச மருத்துவமனையில் கடந்த ஓகசுட் மாதம் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

வலைப்பாடு, வேரவில், கேரஞ்சி ஆகிய கரையோர கிராமங்களில் வசிக்கும் பெண்களே இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓகசுட் 30ம் திகதி வேரவில் பிரதேச மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்கள் தொண்டர்கள் ஆகியோர் குறித்த மூன்று கிராமங்களுக்கு சென்று அங்குள்ள குடும்பங்களில் 5 வயதான குழந்தைகளில் நிறை குறைந்து காணப்பட்டால் கட்டாயம் மருத்துவமனைக்கு வந்து பிள்ளையின் நிறையைப் பரிசோதித்து மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவித்தனர்.

31ம் திகதி வேரவில் மற்றும் கிளிநொச்சி மருத்துவமனைகளை சேர்ந்த 20 தாதிகள் மற்றும் குடும்ப நல ஊழியர்கள் மூன்று கிராமங்களில் வீடு வீடாக சென்று இரண்டு அம்பியூலன்சு வண்டிகளில் தாய்மாரை அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து தெரிவித்த 43 வயதான பெண்ணொருவர், ‘தொண்டு பணியாளர் தனது வீட்டுக்கு வந்து மருத்துவ அட்டையுடன் நிறை குறைந்த 5 வயது பிள்ளையுடன் வைத்தியசாலைக்கு வருமாறு கூறியதாக கூறியுள்ளார். எனது 5 வயது பெண் குழந்தை சிறந்த தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக நான் மருத்துவமனையில் இருந்து வந்தவர்களிடம் நான் கூறினேன்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைகளில் இருந்து வந்த அந்த பரிசோதனைக் குழுவை எனக்கு நன்கு தெரியும். கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து விசேட வைத்தியர்கள் வந்துள்ளதால் சிகிச்சை ஆலோசனைகள் சிறந்ததாக இருக்கும் என நான் கருதினேன்’ எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்களைக் கருத்தடை ஊசியை போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களும் தாதியர்களும் நீண்டகாலம் கருத்தரிக்காது இருப்பதற்காக மருந்தை எடுத்து கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

நீண்டகாலத்திற்கு பின்னர் பிள்ளை பிறந்தால் அந்த குழந்தை ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என காரணம் கூறியுள்ளனர். ஏற்கவே கருத்தடை மருந்துகளை எடுத்துள்ளீர்களா என மருத்துவர்களும் தாதியர்களும் கேட்டுள்ளனர். தான் மாத்திரைகளை எடுத்துள்ளதாக அந்தப் பெண் கூறியுள்ளார். இந்த மருந்து மாத்திரை விட பக்க விளைவுகள் அற்ற சிறப்பான மருந்தாக இருக்கும் என தாதியர்கள் கூறியுள்ளனர்.

முதலில் சகல தாய்மாரும் இந்தப் புதிய கருத்தடை மருந்தை ஏற்றுக்கொள்ளாது அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கருத்தடை மருந்தை போட்டுக் கொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் இந்த மருத்துவமனையில் வேறு சிகிச்சை பெற முடியாது என்று தாதியர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சில பெண்கள் மருத்துவனையில் கொடுத்த அந்த ஊசி மருந்தைப் போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

-அனைத்துலக தமிழர் மையம்

நாம் "இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "இந்தி"(தீ)ய - "இந்தி"(தீ)ய ஒன்றியம்-

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

தமிழ் மொழியில் ஊர்தியில் எண்களை வைப்பது குறித்த நடுவண் அரசின் ஆணை.



வாகன என் மாற்றம்47968_447628965283853_1019644062_nநாம் அனைத்து தளங்களிலும் நம்மை தமிழர் என்று அடையாளப்படுத்திகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

தமிழன் ஒவ்வொருவனும் தன்னைத்தான் "இந்தி"(தீ)ய ஒன்றியத்தை சார்ந்தவன் அல்ல என்றும், தன்னை தமிழன் என்றும் உணர்தல் வேண்டும். 

சாதிகளாய், மாதங்களாய், பிரிந்திராமல் தமிழன் என்ற உணர்வோடு ஒரு கொடயினுள் ஒன்றிணைய வேண்டும்.

வென்றாக வேண்டும் தமிழ்!!! அதற்க்கு ஒன்றாக வேண்டும் உணர்வுள்ள தமிழர்.

-புவிநன்

 

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

Wednesday, October 16, 2013

ஐநா மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை சிறிலங்கா சென்றபோது இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செய்ய முற்பட்ட போது இன வெறி பிடித்த சிங்களம் அதை தடுத்தது .இங்கு சர்மனிக்கு சென்ற நவநீதம் அம்மையார் இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் நாசிகளால் கொல்லப்பட்ட லச்சக்கணக்கான யூத மக்களுக்காக அதே இடத்துக்கு சென்று அஞ்சலி செய்தார்.



இந்தவிடயத்தை நாம் மட்டும் அல்லாமல் உலகமே இதை ஒப்பிட்டு பார்த்தால் சிங்கள இனவாதிகளும் ராசபக்சே கூட்டுக்களவானிகளும், "இந்தி"(தீ)ய ஒன்றியமும் எவ்வளவு கேவலமானவர்கள் என்பது நன்கு புரியும் .

இறந்து போனவர்களின் கல்லறைகளை கூட இடித்து அழித்த இனவாத சிங்களவனா தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கொடுப்பான் ?

இன்று பதவிக்கு அடி பட்டு திக்கு திக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட கூட்டமைப்பின் ஒற்றுமையே சிங்களவனுக்கு போதும் தமிழர்களை அழிப்பதற்கு .

கஞ்சியாக இருப்பினும் அடுத்தவனுக்கு பகிர்ந்துண்டுவிட்டு மகிழ்வாக அடுத்த படியை நோக்கி நகர்வதே குடும்பம். அவர்களே வாழ்க்கையில் வெற்றியும் பெறுவார் ..ஒருவர் கரைக்கும் மற்றவர் தண்ணிக்குள்ளும் இழுத்து தாங்களும் குழம்பி மக்களையும் குழப்பி கரை சேர விடாமல் இருப்பதற்கு பெயர் கூட்டமைப்பு கிடையாது கூத்து அமைப்பு .

இனியேனும் பதவி ஆசையை தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விட்டு சுயநலம் இன்றி தமிழ் கச்சிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்புகள் செய்து தமிழ் மக்களின் நீண்ட கால சுகந்திரகனவை நனவாக்க பாடு படுங்கள் என்று என்னைப் போன்ற ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் நிச்சயம் எதிர்பார்கிறான் .இது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டும் அல்ல தமிழக கச்சிகளுக்கும் சேர்த்தே ....
.....பா .சங்கிலியன் ....

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

திருகோணமலை துறைமுகத்தில் காவியமான கடற்கரும்புலிகளினது வீரவணக்க நாள்


திருகோணமலை துறைமுகத்தில் 17,10.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகிய வேங்கைகளின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலிகளின் தாக்குதலின் மூன்று சிறிலங்கா கடற்படையின் கலங்கள் முற்றாக தாக்கி அழிக்கபட்டது.

கடலிடை உயிர்பூவைச் சொரிந்த உயிராயுதமாக சென்றவர்கள் ஈகத்தில் உருகும் கானம் " கடற்கரும்புலிகள் பாகம் - 02ல் "... யார் பாடிடக் கூடும் எனும் பாடல் இவரின் வரலாறு உரைக்கின்றது...

இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||

என் தந்தையர் நாடெனும் போதினிலே புது சக்தி பிறக்குது மூச்சினிலே


ஈழதமிழர்களின் படுகொலையை முன்னிறுத்தி தமிழகத்தில் பல வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று கொண்டு வருகின்றன.

இந்த போராட்டத்தை இந்திய அரசு மதிக்காவிடின் இப்போது போராடும் மாணவர்கள் அணி தமிழ் தனி நாட்டுக்கான கோரிக்கையை முன் வைத்து போராடினாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை.

பாடசாலை மாணவர்கள் தொடக்கம் கல்லூரி மாணவர்கள் வரை இரண்டு கோடி மாணவர்களும் ஒன்று சேர்ந்து திரண்டால் தனி தமிழ் நாடு உறுதி... 

இதையே ஈழத்தமிழர்களும் எதிர் பார்க்கிறார்கள்...


-தமிழீழ மாணவன்




"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com            

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

சிறீலங்காவில் காமன்வெல்த் மாநாடு நடைபெறகூடாது மலேசியாவில் கண்காட்சி! 15 10 2013


சிறீலங்காவில் நடைபெறவிருக்கும் காமான்வெல்த் மாநாட்டிற்கு எதிராக மலேசியாவின் பினாங்கிலும் பிறை தாமான் சுப்ரீம் திடலில் இனஅழிப்பு தொடர்பான ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு கருத்தரங்கு நடைபெற்றுள்ளது .

இலங்கையில் 2009-ல் 3 அரை இலட்ச்சம் தமிழர்களை கொடூரமாக படுக்கொலை நடத்திய இலங்கையில் கொமான்வெல்த் மாநாடு நடைபெற கூடாது. ஏனென்றால் இந்த மாநாடு நடைபெற்றால் இலங்கை சர்வதேச போர்குற்ற விசாரணையிலிருந்து தப்பி விடும் என்ற அடிப்படையிலே இந்த கண்டன கூட்டம் 13 .10 .2013 காலை 10 மணி அளவில் பினாங்கு பிறை தாமான் சுப்ரீம் திடலில் நடைபெற்றது

மேலும் தமிழினம் இனத்தின் விடுதலையை நோக்கிபயணித்து கொண்டிருக்கும் வேளையில் மலேசியாவில் மலேசியா தமிழர்கள் செய்ய வேண்டிய கடமை பற்றி இக்கூட்டட்தில் தெரிவிக்க பட்டது.

நிகழ்வில் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் மு.அ. கலைமுகிலன் செம்பியன் வீரசிங்கம் அறிவேந்தன் பூமுகன் எழுச்சி உரை ஆற்றினர் . இந்நிகழ்வில் ஏறத்தாழ 100 க்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து தங்கள் ஆதரவை ஈழத்துக்கு தெரிவித்தனர்


-ஈழ மகான் தமிழ்



"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com            

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

AGS திரையரங்கம் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்காமல் இந்திய (ஒன்றிய) நாட்டுப் பண் மட்டுமே தங்கள் திரையரங்குகளில் ஒலிக்கச் செய்யும் காரணத்தால், நாம் தமிழர் கட்சியின் சார்பிலும், தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பிலும் AGS திரையரங்க உரிமையாளருக்கு கோரிக்கை மனு ஒன்றை நேரடியாக கையளித்தோம். ஒவ்வொரு படக் காட்சிக்கும் முன் கட்டாய தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் இடம்பெற வேண்டும் என்பதே அக்கோரிக்கை ஆகும்.








பல திரைப்பட ரசிகர்கள் திரையரங்கில் கூடி இருக்க ‘தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணிக்காதே’ என்ற முழக்கத்தை அனைவரும் முன்வைத்தோம். உடனே திரையரங்க நிர்வாகமும், காவல்துறையும் எங்கள் கோரிக்கையை விரைந்து வந்து பெற்றுக் கொண்டனர்.

இது குறித்து நிர்வாகக் குழுவிடம் பேசி மூன்று நாட்களுக்குள் பதில் தருகிறோம் என்று திரையரங்க மேலாளர் பதிலளித்தார். அவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்க மறுத்தால் அவர்கள் திரையரங்கில் தமிழர்கள் நாங்கள் தமிழ் தாய் வாழ்த்தை ஒலிக்கச் செய்வோம் என்பதை உறுதியுடன் கூறினும்.

காவல்துறையும், தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடுவது தான் முறையானது என்று ஒத்துக் கொண்டனர். தமிழக அரசின் விதிமுறைப்படி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் "இந்தி(தீ)ய ஒன்றியப்  பண்ணையும் பாட வேண்டும் . அதை நடைமுறைப்படுத்த வேண்டியது தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களின் கடமையாகும்.



ஏ.ஜி.எஸ் திரையரங்கில் இந்திய நாட்டுப் பண் மட்டுமே ஒலிப்பதாகவும், அதற்கு தமிழர்கள் அனைவரும் எழுத்து நிற்க வேண்டும் எனவும் நம்மிடம் புகார் வந்ததை தொடர்ந்து தமிழர் பண்பாட்டு நடுவம், நாம் தமிழர் கட்சி, தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த திரையரங்கத்தில் பத்து நாட்களுக்கு முன் மனு கையளிக்கப்பட்டது. அந்த மனுவில், திரையரங்கில் இந்திய நாட்டுப்பண் ஒலிக்கும் நிலையில் தமிழ் தாய் வாழ்த்தும் ஒலிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். 

தற்போது திரையரங்க நிர்வாகம் நம்முடைய கோரிக்கையை ஏற்றுள்ளது. ஏ.ஜி.எஸ் வில்லிவாக்கம், நாவலூர் திரையரங்கங்களில் முதலில் தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் ஒலித்த பின்பே இந்திய நாட்டுப் பண் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம். இது தமிழர்களுக்கு, தமிழுக்கு கிடைத்த வெற்றியாகும். 

விரைவில் மற்ற திரையரங்கிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒலிக்கச் செய்வோம். தமிழகத்தில் இனி எந்த நிறுவனமும் தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணித்து "இந்தி"(தீ)ய ஒன்றியப் பண்ணை மட்டுமே முதன்மை படுத்த முடியாது.

தாய் தமிழுக்கு உரிய மரியாதை செலுத்திய பின்பே மற்ற மொழிகளுக்கு உரிய இடமளிக்கப்படும் . அதற்கான வேலைகளை தமிழ் அமைப்புகள் நிச்சயம் செய்யும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற இலக்கு அடையும் வரை நாம் ஓயாமல் பாடுபடுவோம். வாழ்க தமிழ் !

-இளையவேந்தன்

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com            

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

ஒரு சனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் அவரது சொந்த தாய் மொழியில் தானே கையெழுத்து இடும் உரிமையை பெறவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஏன் வேறு ஒரு மொழியில் கட்டாயமாக கையெழுத்து போட வேண்டும்? நீதியை நிலைநாட்டும் நீதிபதிகளுக்கு இது தெரியாதா ?

ஹிந்தி வெறி சுதந்திரம், சமஉரிமைகளுக்கு எதிரான ஆதார் அட்டை கட்டாயமல்ல : உச்சநீதிமன்றம் அதிரடி தனிமனித விவரங்களான கண்ரேகை , விரல் ரேகைகளை பொது மக்களிடம் சேகரிப்பதோடு , அவர்களை கட்டாயப் படுத்தி அவர்களின் வங்கிக் கணக்கை ஆதார் அட்டையோடு இணைக்கிறது நடுவண் அரசு.நாங்கள் தாய் மொழியில் தான் கையெழுத்திடுவோம் என்று ஏன் நீதிபதிகள் சொல்லவில்லை. "இந்தி"(தீ)யில் கையெழுத்து இட்டவுடன் அவர்களுக்கு நீதிபதி பதவி வழங்கப்பட்டுவிடுமாம் . அதுவரை அவர்களுக்கு பதவி வழங்கப்படாது எனத் தெரிகிறது.

இது மொழி உரிமைக்கு புறம்பானது அல்லவா ?

மனித உரிமை மீறல் ஆகாதா ?

 

 

நீதிபதிக்கே இந்த நிலை என்றால் "இந்தி"(தீ)ய ஒன்றியத்தில் சாதாரண குடிமகனுக்கு எந்த அளவில் இந்தி"(தீ) திணிப்பு இருக்கும் என்று சொல்ல வேண்டியதே இல்லை. அதை தடுக்கும் வல்லமை குடிமகனுக்கு நிச்சயம் இருக்காது.

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் இந்தி"(தீ) திணிப்பு, வெறிப் போக்கிற்கு நாம் நிச்சயம் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். "இந்தி"(தீ)ய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சம உரிமைகள் கொடுக்கப் பட வேண்டியது தான் முறையானது .

அனைத்து மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய மக்கள் அனைவரும் வலியுறுத்த வேண்டும் . இல்லையெனில் "இந்தி"(தீ)யை அனைவரின் தாய் மொழியாக ஏற்க வைக்கும் "இந்தி"(தீ)ய ஒன்றியம் என்பதில் ஐயமில்லை.

இந்தி"(தீ) திணிப்பு, வெறிப் போக்கையும் ஆதிக்கத்தை ஒழிப்பதே நாம் தற்போது முன்னெடுக்க வேண்டிய பெரும் போராட்டமாகும்.

-----------------------------------------------------------

இதை ஏற்றுக்கொண்ட சனாதிபதி, 7 பேரையும் நீதிபதியாக நியமிக்க கடந்தவாரம் ஒப்புதல் அளித்தார். இதை தொடர்ந்து, சனாதிபதி மாளிகையில் இருந்து, சென்னை உயிர்நீதிமன்றத்திற்க்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த ஆவணங்களில், உயிர்நீதிமன்றத்திற்க்கு நீதிபதி பதவிக்கு தேர்வாண ஆர்.மகாதேவன் உட்பட 7 பேரும் நேற்று இந்தி"(தீ) மொழியில் தங்களது கையெழுத்தை போட்டனர். இதையடுத்து அந்த ஆவணங்கள் நேற்று மாலையே டெல்லியிலுள்ள சனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இந்தி"(தீ) மொழியில் கையெழுத்திட்ட பிறகு, அவர்களை நீதிபதியாக நியமித்து சனாதிபதி இறுதி உத்தரவு பிறப்பிப்பது வழக்கம்.

இப்போது, 7 பேரும் இந்தி"(தீ)யில் கையெழுத்து போட்டதை தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் இவர்களை உயிர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து சனாதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என்றும், இதைத்தொடர்ந்து 7 பேரும் வரும் வாரங்களில் பதவி ஏற்பார்கள் என்றும் உயிர்நீதிமன்ற வட்டாரத்தில் கூறப்பட்டது.

-இளையவேந்தன்

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

 

தமிழுக்கு தடை சொல்லும் பள்ளிகள் எம் குழந்தைகளுக்கு தேவை இல்லை என்று ஒவ்வொரு பெற்றோரும் முடிவெடுத்து விட்டால் கட்டணக் கொள்ளை பள்ளிகளுக்கு முடிவு கட்டி விடலாம்.



தமிழின் சிறப்பு ௧ தமிழின் சிறப்பு


தாய் தமிழ் பள்ளி பிள்ளைகளின் சிறப்பான கவிதைப் பேச்சு. இதை தனியார் மெட்ரிக், நடுவண் அரசு பள்ளிகளில் கேட்க முடியாது. அவசியம் கேளுங்கள்.

என் கண்ணனுக்குத் தேவை என் மண்ணின் மொழி,
என் மக்களின் மொழி, இது மொழி வெறியல்ல
வேர்களின் மீதான கவலை!





என் கண்ணனுக்குத் தேவை

என் மண்ணின் மொழி,

என் மக்களின் மொழி

இது மொழி வெறியல்ல

வேர்களின் மீதான கவலை!






இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U