இதுவரை தமிழக காவல்துறை இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. அதனால் நீதிமன்றத்தை அணுகி உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அனுமதி கோரியுள்ளனர் போராட்டக் குழுவினர் .
தற்போது தீர்ப்பளித்த நீதிமன்றம், காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அனுமதியளிக்க வேண்டும் என காவல்துறையிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காவல்துறை போராட்டம் நடத்துவதற்கு இடம் கொடுத்துள்ளது.
இன்று மாலை 5 மணி முதல் தோழர் தியாகு சாகும் வரை பட்டினிப் போராட்டத்தை அங்கிருந்து தொடர உள்ளார். தமிழர் நலன் சார்ந்த அனைத்து கட்சிகளும் , அமைப்புகளும் , மாணவர்களும் , தனி நபர்களும் தோழர் தியாகுவின் உன்னதமான போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
-இளையவேந்தன்
No comments:
Post a Comment