Showing posts with label இலங்கையின் இனப்படுகொலை. Show all posts
Showing posts with label இலங்கையின் இனப்படுகொலை. Show all posts

Tuesday, October 1, 2013

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய ஒன்றியம் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தோழர் தியாகு காலவரையற்ற உண்ணா நிலை போராட்டத்தை முன்னெடுத்து உள்ளார்.

சிங்களவா பொறுத்திரு எம் சீற்றம் காண காத்திரு 1385385_412011315565489_840606041_n 1379572_412011842232103_863005675_n 602057_430036203777003_478316756_n 1005363_430035830443707_1203291727_n 1186277_430036043777019_133723035_n b2d1f-e0aea4e0af81e0aeb0e0af8be0ae95e0aebfe0ae95e0aeb3e0af88e0ae87e0aea9e0aeaee0af8de0ae95e0aebee0aea3e0af81e0aeb5e0af8be0aeaee0af8d

இதுவரை தமிழக காவல்துறை இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. அதனால் நீதிமன்றத்தை அணுகி உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அனுமதி கோரியுள்ளனர் போராட்டக் குழுவினர் .

தற்போது தீர்ப்பளித்த நீதிமன்றம், காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அனுமதியளிக்க வேண்டும் என காவல்துறையிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காவல்துறை போராட்டம் நடத்துவதற்கு இடம் கொடுத்துள்ளது.

இன்று மாலை 5 மணி முதல் தோழர் தியாகு சாகும் வரை பட்டினிப் போராட்டத்தை அங்கிருந்து தொடர உள்ளார். தமிழர் நலன் சார்ந்த அனைத்து கட்சிகளும் , அமைப்புகளும் , மாணவர்களும் , தனி நபர்களும் தோழர் தியாகுவின் உன்னதமான போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

-இளையவேந்தன்

Sunday, September 22, 2013

சட்ட விரோதமாக கூட நடந்து கொள்வோம்.... நியாய விரோதமாக ஒருபோதும் போக மாட்டோம்....

சிங்களவா பொறுத்திரு எம் சீற்றம் காண காத்திரு 1186277_430036043777019_133723035_n 1005363_430035830443707_1203291727_n 1385385_412011315565489_840606041_n 602057_430036203777003_478316756_n நாளை பஞ்சாப் மொகாலியில் நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டியில் இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டின் ஆட்டக்காரன் திசாரா என்பவன் விளையாடுகிறான். இதற்கு தமிழ்நாடு மாணவர் பேரவை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கை ஆட்டக்காரனை இந்தியாவிற்குள் விளையாட அனுமதிக்காதே என்று கோரிக்கை வைத்துள்ளனர். மீறினால் மாணவர்கள் கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து போராட்டம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பல பெயர்கள் எனக்குண்டு..

இனத்தை நேசிப்பதால் இனவாதி..
மொழி பற்றோடிருப்பதால் மொழி வெறியன்..
அடக்குமுறையை வெறுப்பதால் தீவிரவாதி...
அதிகாரம் எதிர்ப்பதால் பயங்கரவாதி..
விடுதலைக்கு கூவுவதால் கூச்சல்காரன்..
சமூக அக்கறை இருப்பதால் வேலை இல்லாதவன்..
பணம் சேர்க்காததால் கேனையன்..
அடிக்கடி அரசியல் பேசுவதால் உருப்படாதவன்..
சாதி மறைப்பதால் நடிகன்...
பார்ப்பனியத்தை எதிர்ப்பதால் பரதேசி..
இட ஒதுக்கீடை ஆதரிப்பதால் அக்கிரமக்காரன்...
தமிழ்த்தேசியம் பேசுவதால் வன்முறையாளன்..
இந்தியத்தை எதிர்ப்பதால் மாவோயிஸ்ட்..
ஈழத்தை நேசிப்பதால் புலி...

மொத்தத்தில் வீணாப்போன வெறும்பய என்ற கொள்கைக்காரன்...

* மானம் *

உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?

அவன்
கைகளை
வெட்டு.

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே.

அம்மணமாகவே
போராடு.

- காசி ஆனந்தன்.

Even if your
last bit of dress
were stripped,

Cut his hand..

Dont beg it
and dress...

struggle nudely...
that is bravery...

--Kasi ananthan

"As long as you keep a person down, some part of you has to be down there to hold him down, so it means you cannot soar as you otherwise might."- Marian Anderson

"Freedom is never voluntarily given by the oppressor; it must be demanded by the oppressed" - Martin Luther King Jr.

தமிழின படுகொலை ஆதாரங்கள் தமிழர்க்கான விடுதலை என்று பிறக்கும்