Tuesday, October 8, 2013

தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணித்து இந்திய ஒன்றிய கீதத்தை மட்டுமே ஒலிபரப்பும் ஏ.ஜி.எஸ் திரையரங்கத்திற்கு ஏற்கனவே நாம் தமிழர் கட்சியும் , தமிழர் பண்பாட்டு நடுவமும் தமிழ்த் தாய் வாழ்த்தை ஒலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். இது வரை இந்த கோரிக்கைக்கு ஏ.ஜி.எஸ் நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை.

 

 

 

இந்நிலையில் இன்று தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஏ.ஜி.எஸ் நிர்வாகத்திடம் மனு ஒன்றை கையளித்தது. தமிழ் மாணவர்களின் கோரிக்கையை நிராகரித்தால் ஏ.ஜி.எஸ் திரையரங்கின் உள்ளே வந்து தொடர் முழக்க போராட்டத்தை முன்னெடுப்போம் என்று அறிவித்தனர் மாணவர்கள். 

கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட திரையரங்க நிர்வாகம், இந்த வார இறுதிக்குள் இந்த பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாக அறிவித்து உள்ளது. தமிழர்கள் நல்லதொரு தீர்வை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

-இளையவேந்தன் 

 

No comments:

Post a Comment