Sunday, November 10, 2013

தமிழர்களே சிந்திப்பீர் ! இன்று நாம் சாதியாலும் மதத்தாலும் பிரித்து வைக்கப்பட்டுள்ளோம். மதவாத கட்சிகள் நம்மை தமிழர்களாக உணர வைக்காது , நம்மை மதவாதிகளாக குறுகிய வட்டத்திற்குள் அடைத்து வைத்து மற்ற மதங்களுடன் நம்மை மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. தமிழர் ஒற்றுமையை மதத்தால் சீர்குலைத்து விட்டனர். தமிழர்கள் என்றுமே மதவாதிகள் அல்லர். இருந்தும் நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியை மதவாதிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர் . தமிழர் என்ற இன அடையாளத்தை சிதைத்து வருகின்றனர்.



401627_320479121316769_571080748_n

1395825_596467133753538_933893019_n                                                              தமிழர்கள் எந்த மதத்தை சார்ந்தாலும், மதம் சாராதவராக இருந்தாலும் தாங்கள் முதலில் தமிழர் என்றே கருதுதல் வேண்டும். இனத்தால், மொழியால் நாம் அனைவரும் தமிழர்களே என்று உணருதல் வேண்டும்.

மதங்களுக்குள் இருக்கும் பிற பிரிவினர் , சாதியினர் அனைவருமே தமிழர்கள் தான். நம்முடைய சாதி மத கருத்தியல் வேற்றுமைகள் களைந்து நாம் அனைவரும் தமிழர்களே என்று உலகிற்கு உரக்கச் சொல்வோம் .

நம்மை பிரித்தாளும் மதவாதத்தை துரத்தி அடிப்போம். தமிழர்களாக ஒன்றினைவோம்.
தமிழர் என்பதே நம் அடையாளம்!
சாதியாய் மதமாய் பிரிவது அவமானம்!

No comments:

Post a Comment