Sunday, November 10, 2013

சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார்? கண்டிப்பாக படியுங்கள் & பகிருங்கள் "சமீபத்தில் செல்சியாவின் அருங்காட்சியகத்தில் 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு பிரிட்டன் படையினர் இரண்டாம் உலகப்போரின் போது யுத்தம் செய்ததை பட்டியலிட்டனர்.



இதில் 5 யுத்தங்கள் இடம் பெற்றிருந்த தேர்வில், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினருடன் நடைபெற்ற யுத்தமே பிரிட்டன் படையினர் போரிட்ட மிகப்பெரிய யுத்தமாக தேர்வு செய்யப்பட்டது.

இந்த யுத்தம் மணிப்பூர் தலைநகர் இம்பாலிலும், நாகலாந்து தலைநகர் கொஹிமாவிலும் நடைபெற்றது இப்போரில் ஜப்பான் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தினரில் 53,000 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போது பிரிட்டன் படையை சேர்ந்த 16,500 வீரர்களும் கொல்லப்பட்டனர்.” வெள்ளையன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இனியும் தாக்குப் பிடிக்க முடியாது என்று முடிவெடுத்த காரணம் இதுதான்.

ஆனால் போரிட்டவர்களை அழைத்து சுதந்திரம் கொடுத்தால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு அவமானம் என்று அகிம்சையால் மட்டும் சாத்தியமானது என்று கூறி நாட்டை விட்டு வெளியேறியது. இதுவே உண்மை.

வேண்டுமென்றே காங்கிரஸ்கார்கள் நேதாஜியின் வீரத்தை இருட்டடிப்பு செய்து காந்திஜியால் மட்டுமே சுதந்திரம் பெற்றோம் என்று ஆட்சியை பிடித்து ஏனைய போராளிகளை உலகம் மட்டுமல்ல இந்தியர்களே அறியாமல் செய்துவிட்டனர் இதைவிட வெட்கக்கேடு எதுவும் இருக்க முடியாது..

No comments:

Post a Comment