Monday, November 4, 2013

ஈழம் தொடர்பான விவாதங்களில் பங்கேற்கும் தமிழின அழிப்பாளி சு.சாமி தொடர்ந்து சொல்லும் கருத்து???



"காசுமீர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது. ஈழ விவாகரத்தில் நாம் தலையிட்டால் இந்தியா விடயத்தில் பிற நாடுகள் தலையிடும்"

அதாவது இந்தியா நடத்திய மனித உரிமை மீறல் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறான்.

தன்னை இந்தியன் என்று சொல்லி பெருமைப்படும் எவரும் இது குறித்து வாய் திறப்பதில்லை. 

காசுமீர், மணிப்பூர் ஆகிய இடங்களில் நடக்கிற மனித உரிமைகளை நாமும் கண்டிக்க வேண்டும். அம்மக்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க வேண்டும்..

நம் நாடு என்ன செய்தாலும் சரி என்று நியாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும்..

ஈழக் கொடுமைகளுக்கு துணைபோன இந்தியாவை கண்டித்தே ஆக வேண்டும். இல்லை அது காங்கிரசின் தவறு என்று சப்பைக்கட்டு கட்டுவதை நிறுத்த வேண்டும்..

வருடத்திற்கு இரண்டு நாள் தேசியக்கொடியை கையில் ஆட்டிக்கொண்டு வருவதே இங்கே இந்திய தேசியப்பற்றாக இருக்குது. 
மற்றபடி மனிதாபிமானம், ஈவு, இரக்கம், நீதி எதுவும் கிடையாது..

போங்கடா நீங்களும் உங்க இந்தியாவும்...

 

No comments:

Post a Comment