Monday, November 4, 2013

இரண்டும் ஒன்றா? இம்ரான் படையணி என பெயரிட்ட பிரபாகரன் என்ன இந்து வெறியரா? உண்மையில் சிங்கள பௌத்த ஆதிக்கத்திலிருந்து பரிபூரண விடுதலைபெற புலிகள் பக்கமல்லவா முசுலீம்கள் நின்றிருக்கவேண்டும்??? தங்கள் மத உணர்வை மறைத்துக்கொண்டு, மனிதநேயத்தோடு பேசுவதான பாவனையில் "ஈழத்தின் இசைப்பிரியா கொலையும், குசராத்தின் இர்சரத் சகான் கொலையும்" ஒன்றென பதிவிடுகிறார்கள் சில அறிவுசீவிகள். மேலும் புலிகள் இசுலாமியர்களை துரத்தியது மட்டும் நியாயமா என்றும், இந்த விடயத்தில் பிரபாகரனும் மோடியும் ஒன்றேயெனவும் விசமத்தனமாக வாதம் செய்கிறார்கள் சில மதவெறியர்கள். அவர்களுக்கானது இந்த பதிவு....



மோடியை இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்றால் அவரால் தங்கள் மதத்திற்கும் தங்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்பதற்காகவே. அதே மோடி & கோ-வால் இங்கே மேல்சாதியல்லாத ஏனைய கீழ்சாதி மக்களுக்கு ஏற்படப்போகும் விளைவுகளையெல்லாம் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை. மோடி ஒரு இனப்படுகொலை செய்த தீவிரவாதி. அவனை நாம் ஒரு போதும் ஆதரித்ததுமில்லை, ஆதரிக்கப் போவதுமில்லை.

இதில் மதங்களைக் கடந்த முற்போக்கு எதுவுமில்லை. உண்மையில் ஒரு இசுலாமியன் மோடியை எதிர்ப்பதும் ஒரு இந்து மோடியை எதிர்ப்பதும் அடிப்படையில் ஒன்றல்ல. வெவ்வேறானது. முதலில் தமிழர்கள் தங்களை இந்துக்கள் அல்ல என்பதையும் தாங்கள் இயற்கையை தான் வழிப்பட்டோம் என்ற உண்மையையும் புரிந்துணர வேண்டும். இங்குள்ள இசுலாமியர்கள் ௧௫(15) ஆம் நூற்றாண்டிற்கு முன்பு தாங்கள் தமிழர்களே என்பதை  உணர வேண்டும்.

குசராத் படுகொலைகளுக்காக தமிழ்நாட்டில் பல சனநாயக தமிழ் அமைப்புகள் போராடியிருக்கிறார்கள்.

தமிழ் ஈழத்திற்காக குசராத் முஸ்லீம்கள் போராடியிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை வேறெந்த மாநிலத்திலாவது எங்கேனும் முஸ்லிம்கள் ஈழப்படுகொலைகளுக்காக போராடியிருக்கிறார்களா?

ஏதோ இந்தவாரம் டெல்லியில் நடந்த ஒரு சிறிய அமைப்பின் ஆர்ப்பாட்டத்தைத்தவிர. இத்தனைக்கும் இந்தியாவில் முசுலீம்கள் ஈழத்தமிழர்களைவிடவும் ஒட்டுமொத்த தமிழர்களைவிடவும் பலமடங்கு அதிகம். வேறு எந்த நாட்டிலாவது முசுலிம்கள் ஈழ இனப்படுகொலைக்காக போராடியிருக்கிறார்களா?

இலங்கையில் இடிக்கப்பட்ட மசூதிக்காக இங்கேயும் அங்கேயும் தமிழர்கள் போராடுகிறார்கள். ஒரு பேச்சுக்காக இடிக்கப்பட்ட ஏதேனும் இந்துக் கோயில்களுக்காக ஏதாவது முசுலீம் அமைப்புகள் போராடியிருக்கிறதா?

அவர்கள் அவர்களின் மதத்திற்காக மோடியை எதிர்க்கிறார்கள் அவ்வளவே.

காசுமீரில் 70000க்கும் மேலாக அப்பாவிகளைக் கொன்ற காங்கிரசை சாத்வீகமாகப் பார்க்கிறார்கள். பெரும்பான்மை மக்களிடமிருந்து தனிமைப்பட்டுப் போகாமலிருக்கவே அவ்வப்போது இம்மாதிரி சனநாயகம் பேசுகிறார்கள். அவர்கள் பகுத்தறிவு பேசுவது கூட அவர்களின் மதம் புண்படாதபடிதான்.

மதத்தைதவிர முசுலீம்களுக்கு முக்கியம் எதுவுமேயில்லை. அப்படியிருக்கும் நபர்களோ மிக மிக குறைவு. இந்தியாவில் முசுலீம்கள் பாதிக்கப்படுவதும் ஈழத்தில் தமிழர்கள் பாதிக்கப்படுவதும் ஒன்றென்பது எவ்வகையில்?

இசுலாமியர்கள் இங்கே சனாதிபதியாகவோ பிரதமராகவோ மற்றும் நாட்டின் வேறெந்த அதிகாரப் பதவிகளிலும் அமரும்படியாக இருக்கும் உரிமைகள் இலங்கையில் தமிழர்களுக்கு இருக்கிறதா?

உடனே நான் இந்து வெறியன் என்று நீங்கள் கணித்தால் சிரிப்பதைத்தவிர என்னிடம் வேறு பதிலில்லை. இந்து என்ற மதம் பார்பனியத்தின் கள்ளக்குழந்தை. தமிழர்கள் யாரும் இந்துக்கள் அல்ல.

ஈழத்தமிழர்களின் நிலையும் குசராத்தில் முசுலிம்களின் நிலையும் ஒன்றென ஒப்பிடுவது கேவலமான அரசியல். மத பிரிவினைக்காகவா புலிகள் முசுலீம்களை ஒதுக்கினார்கள்??? சொந்த மண்ணை மீட்கும் போராட்டத்தை சரிவர உள்வாங்காமல் சிங்களனுக்கு தொடர்ந்து ஆட்காட்டி / தரகு வேலை பார்த்தது நியாயமென்றா கருதுகிறீர்கள்???

உண்மையில் சிங்கள பௌத்த ஆதிக்கத்திலிருந்து பரிபூரண விடுதலைபெற புலிகள் பக்கமல்லவா முசுலீம்கள் நின்றிருக்கவேண்டும்.

இம்ரான் படையணி என பெயரிட்ட பிரபாகரன் என்ன இந்து வெறியரா?

மோடியைப்போல மதத்திற்காகவா போராடினார் அவர்?

இப்படியெல்லாம் ஒப்பிட உங்களைத் தூண்டும் உங்கள் மத உணர்வு கேவலமாக படவில்லையா?

கடைசிவரையில் கருணாவை இழுக்க சிங்களத் தரப்பிற்கு ஒட்டுவேலை பார்த்தது யாராம்? ஈழத்தில் எத்தனை முசுலீம் பெண்கள் / அணிகலன் பெண்கள் புலிகளால் கற்பழிக்கப்பட்டார்கள்? அல்லது கற்பழித்து கொலைசெய்யப்பட்டார்கள்?

இப்படி அடிப்படை புரிதலின்றி மதசாயம் தோய்த்த கருத்துக்களை வெளிப்படுத்தும் சிறுபான்மை அறிவுசீவிகள் உண்மையில் மோடியைவிடவும் பயங்கரமானவர்கள்.

ஒருவேளை பெரும்பான்மையினராயிருந்தால் மோடியையும் விஞ்சிவிடுவார்கள். முதலில் அழுக்கேறிக்கிடக்கும் தன் மத அங்கியை கழற்றி துவைத்துவிட்டு பின்னர் புலிகளைப் பற்றி விமர்சிகலாம்.

இர்சரத்து சகான் படுகொலையை கண்டித்து பல போராட்டம் நடத்தப்பட்டது தமிழ்நாட்டில். இப்போதும் உரக்கச் சொல்கிறோம்!!! உங்களுக்காக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம், இனியும் போராடத் தயார். நாங்கள் போராடியதை எந்த இசுலாமியனாலும் மறுக்க இயலாது, மறைக்க வேண்டுமானாலும் இயலும்.

அதேப் போல் எங்கள் இனவிடுதலைக்கு போராட நீங்கள் தயாரா மத முகமூடிகளை களைந்துவிட்டு????

இசைப்பிரியாவின் படுகொலையை கண்டித்து எத்தனை போராட்டத்தை யார் நடத்துகிறார்கள் குஜராத்தில் என பார்ப்போம்...!

எங்களை குறைகூருவதர்க்கான தகுதியை வளர்த்துக்கொண்டு வாருங்கள்???

மீண்டும் சிந்திப்போம்!!!!!!

வெளியேறு ! வெளியேறு ! இந்தி"(தீ)யன் எல்லாம் வெளியேறு 

https://www.youtube.com/watch?v=ueoaf2Qw7p4

No comments:

Post a Comment