Tuesday, November 5, 2013

திராவிடத்தை யாரும் திட்டவில்லை.அதன் கொள்கைகள் தமிழர்களுக்கு எதிரானதாக இருப்பதால் விமர்சிக்கப்படுகிறது.அவ்வளவே. மேலும் ஆரியத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே ,அதனுடன் மறைமுகக் கூட்டணி வைத்து தமிழையும், தமிழரையும் ஒழித்துக் கட்டுவது தான் இதுவரை அது செய்து வந்துள்ளது.இன்னொன்றையும் சொல்கிறோம், ஆரியம்,பார்ப்பனீயம்,பிராமணீயம் ஆகிய முன்றையும் இன்றுவரை தமிழர்கள் தான் முழுமூச்சுடன் எதிர்த்து வந்துள்ளார்கள்.

இந்த மண்னாலும் மொழியாலும் தான் நமக்கு பெருமைதிருவள்ளுவர் தொடங்கி,அய்ய வைகுண்டர் ,வள்ளலார் வரை தமிழர்களுக்கு அவர்களை எதிர்ப்பதற்கான வழிமுறைகளை தமிழர்களுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.

அவர்களின் பாதையை விட்டு விலகி 80ஆண்டுகாலம் திராவிடத்தின் பின்னால் தமிழர்கள் சென்றதால் தான் தமிழர்களுக்கு மிகப் பெரிய இழப்புகள் ஏற்ப்பட்டன. அதை உணர்ந்த தமிழர்கள் இப்போது தான் தமிழ்தேசியம் என்ற சரியான வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.எனவே தான் திராவிடம் அவர்களால் விமர்சிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். இதகைய விமர்சனங்களுக்கு நீங்கள் உரிய பதிலை திராவிடர்கள் தரலாமே...

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

எங்கள் தாய்மொழி தமிழ்

 https://www.youtube.com/watch?v=jpmmFA7K-g0

No comments:

Post a Comment