Tuesday, October 1, 2013

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய ஒன்றியம் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தோழர் தியாகு காலவரையற்ற உண்ணா நிலை போராட்டத்தை முன்னெடுத்து உள்ளார்.

சிங்களவா பொறுத்திரு எம் சீற்றம் காண காத்திரு 1385385_412011315565489_840606041_n 1379572_412011842232103_863005675_n 602057_430036203777003_478316756_n 1005363_430035830443707_1203291727_n 1186277_430036043777019_133723035_n b2d1f-e0aea4e0af81e0aeb0e0af8be0ae95e0aebfe0ae95e0aeb3e0af88e0ae87e0aea9e0aeaee0af8de0ae95e0aebee0aea3e0af81e0aeb5e0af8be0aeaee0af8d

இதுவரை தமிழக காவல்துறை இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. அதனால் நீதிமன்றத்தை அணுகி உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அனுமதி கோரியுள்ளனர் போராட்டக் குழுவினர் .

தற்போது தீர்ப்பளித்த நீதிமன்றம், காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அனுமதியளிக்க வேண்டும் என காவல்துறையிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காவல்துறை போராட்டம் நடத்துவதற்கு இடம் கொடுத்துள்ளது.

இன்று மாலை 5 மணி முதல் தோழர் தியாகு சாகும் வரை பட்டினிப் போராட்டத்தை அங்கிருந்து தொடர உள்ளார். தமிழர் நலன் சார்ந்த அனைத்து கட்சிகளும் , அமைப்புகளும் , மாணவர்களும் , தனி நபர்களும் தோழர் தியாகுவின் உன்னதமான போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

-இளையவேந்தன்

No comments:

Post a Comment