Sunday, October 20, 2013

"கருப்பு நாள் சூன் "1"


உலகின் மிகப் பெரிய சர்வாதிகாரி
என்று பெயரெடுத்த இட்லர்கூட
இங்கிலாந்து சென்று தாக்கும் தனது
விமானப் படையினருக்கு, "ஆக்சுபோர்டு
பல்கலைக்கழகத்தின் மீது குண்டு
போடாதீர்கள்' என்று எச்சரித்ததாகத்
தகவல்கள் உண்டு.


ஆனால் மிகப் பழமை வாய்ந்த, ஆசியாவிலேயே
மிகப் பெரிய நூலகம் என்ற
பெருமையை உடைய யாழ்ப்பாண
நூலகம் சிங்கள வெறியர்கள்
தீ வைத்ததில் நூலகத்தில் இருந்த
பழமையும் தொன்மையும் வாய்ந்த
சுமார் 97 ஆயிரம் அரிய
நூல்கள் மற்றும் ஓலைச் சுவடிகள்
எரிந்து சாம்பலாயின.


செய்தீ கேட்டு உலகமே அதிர்ச்சியுற்றது.

அந்த கொடூர நிகழ்வு நடைபெற்றநாள்
1981ஆம் ஆண்டு ஜுன் 1 ஆம்
தேதி.

தமிழா,
வரலாற்றில்
மன்னிக்கவோ
மறக்கவோ
முடியாத
கருப்பு நாள்
இது...!

 

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா???


No comments:

Post a Comment