இயற்கையின் நீர் நிலைகள் அனைவருக்கும் சொந்தம் என்று கூறி தலித்துகளை ஊர்ப்பொது குளத்துக்கு நீர் அருந்த அழைத்து செல்ல புறப்பட்டு விட்டதா?
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க புறப்பட்டு விட்டார்களோ!
இதில் எதுவும் இல்லையென்றால் அப்புறம் என்னய்யா ஒரே நாடு! ஒரே மக்கள்! ஒரே சட்டம்! எனும் கோஷம் உங்களுக்கு? சாதி கட்டமைப்பை பாதுகாத்து வைத்துக்கொண்டு, நாமெல்லாம் ஒன்று, நமக்குள் வேறுபாடுகள் இல்லை,இந்த நாடு இந்து நாடு,இந்து மக்கள் சொந்த நாடு என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறீர்களே.என்னய்யா ஏமாற்று வேலை இது? இளைஞர்களே சிந்தித்து பார்க்க மாட்டீர்களா?
-யுவான் சுவாங்
No comments:
Post a Comment