Monday, September 16, 2013
தமிழனின் தமிழ் உணர்ச்சி தவறாக பயன்படுத்தப்படுகிறது இங்குள்ள அரசியல் தலிவர்களால்
தமிழின உணர்வாலும், நம்மால் முடிந்த நன்மைகளை தமிழர் தேசத்திற்கு செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் செயல்படும் தமிழர்களுக்கு நான் கூறிக்கொள்வது ஒன்றே பன்று தான்.
நீங்கள் இந்த அரசியல் களத்தில் உள்ள அரசியல் தலிவர்களின் பேச்சை மட்டும் கேட்டு இந்த இழிபிறப்புகளுடன் நிற்காதீர்கள், இவர்களின் கட்சி வேலைகளை செய்யாதீர்கள்; இவர்களின் வரலாற்றை பின்னோக்கி நன்றாக ஆராயந்துபாருங்கள்; பல முறை ஆய்வுகளுக்கு பின்னர் கட்சிகளில் செயல்படுங்கள். அதுவே உண்மையான பகுத்தறிவு. இந்த அடிவருடிகள் யார் என்பதும், இவர்கள் செய்துள்ள துரோகங்களும் நன்கு விளங்கும்.
பேச்சிற்க்கும், செயலுக்கும் சமந்தமே இல்லாத இவர்களின் பின்னால் நிற்க்காதீர்கள். இவர்கள் பேசியே இளைஙர்களை ஏமாற்றுகிறார்கள்; இதுவரை செயல் ரீதியாக ஒன்றுமே செய்ததில்லை.
அரசியல்வாதிகள் என்றேனும் போதுவாகனங்களில் சென்றதுண்டா?., இல்லை நீங்கள் தான் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு பணமென்று கேட்டதுண்டா?.
தெருவோரங்களில் உழைத்து, தற்சார்பு பொருளாதார வாழ்வியல் முறையில் வாழும் தோழர்களிடம் பேரம் பேச சுழலும் நாக்கு ஏன் கொள்ளையடிக்கும் இழிபிறவிகளிடம் கேள்விகள் கேட்க்காதா?
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா?
-புவிநன்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment