Saturday, September 21, 2013

ஒரு பக்கம் தேர்தலை தமிழர்கள் புறக்கணித்திருக்க வேண்டும் என்ற சிந்தனை இருந்தாலும் , போட்டியிட்ட இடங்களில் தமிழர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது நமக்கு குறைந்த பட்ச ஆறுதல். தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாழ்த்துகள்.


படம்

வடமாகாண சபை தேர்தல் முடிவின்படி 5 மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளதோடு யாழ்ப்பாணத்தில் 14 ஆசனங்களையும், முல்லைத்தீவில் 4 ஆசனங்களையும், கிளிநொச்சியில் 3 ஆசனங்களையும், வவுனியாவில் 4 ஆசனங்களையும், மன்னாரில் 3ஆசனங்களையும் பெற்றுள்ளது. தேசியப்பட்டியல் 2 ஆசனங்கள் தமிழ் கூட்டமைப்பக்கே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அந்தக் கட்சியே முன்னணி பெற்று, வெற்றி பெற்றது.

-இளையவேந்தன்

No comments:

Post a Comment