Showing posts with label கூடங்குளம் போராட்டம். Show all posts
Showing posts with label கூடங்குளம் போராட்டம். Show all posts

Thursday, October 17, 2013

எதிர்ப்பினைப் பதிவு செய்வோம்!

422211_365583370178608_686235286_n 1234034_684332878245407_1240642107_n




தமிழக, கேரள மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ளாமலும், லட்சக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் வகையில் கூடங்குளத்தில் தொடங்கப்பட்டுள்ள அணுஉலைகளில் இதுவரை மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.


பிரதமர் தொடங்கி மத்திய அமைச்சர்கள் பலரும் அணு உலையில் உற்பத்திக்கான தேதியை பலமுறை அறிவித்தும், அறிவித்தபடி உற்பத்தியே தொடங்கவில்லை. கூடங்குளம் அணு உலைத் திட்டமே தோல்வியில் உள்ள நிலையில் 3ஆவது மற்றும் 4ஆவது உலைகளுக்காக ரசுயாவுடன் ஒப்பந்தம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார்.


இதற்காக ரசுயாவுக்கு வரும் 20ஆம் தேதி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு கூடங்குளம் அணு உலை திட்டம் தொடர்பாக அடுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். பிரதமரின் இந்த முடிவுக்கு அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.


இடிந்தகரையில் வரும் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மற்ற இடங்களிலும் தயவு செய்து எதிர்ப்பினைப் பதிவு செய்யுங்கள்.


-கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பியக்கம் மற்றும் செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் குழு




"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

That's the reality of the Fukushima Daiichi nuclear power plant accident

http://youtu.be/pV2OEJTmR7k


Wednesday, October 9, 2013

கூடங்குளம் விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திக்கும் முடிவு ஒத்திவைப்பு



சில சமூக விரோத சக்திகள் தொடர்ந்து இரவு நேரங்களிலே இடிந்தகரை ஊருக்குள் உள்ளேயும், வெளியேயும் நாட்டு வெடி குண்டுகளை வீசி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் அணுஉலை போராட்டக்குழு தமிழக முதல்வரை சந்தித்து பயங்கரமான சதி திட்டங்கள் பற்றியும், மக்களை அச்சுறுத்துவது, மக்களை பிளவுபடுத்துவது, சாதி–மத நச்சு விதைகளை பரப்புவது போன்ற செயல்பாடுகள் பற்றி முறையிடுவது சம்பந்தமாகவும், கூடங்குளம் அணுஉலை குறித்தும், கனிம மண் கொள்ளை குறித்தும் முதலமைச்சரிடம் முறையீடு செய்வதாக திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் முதலமைச்சரை சந்திப்பதற்கான நேரம் இன்னும் கனியாத காரணத்தால் சமுதாய தலைவர்கள், ஊர் மக்கள் போராட்டக்குழுவிடம் முதல்வரை சந்திக்க சென்னை செல்கின்ற திட்டத்தை மற்றொரு நாளுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று கூறினர்.

இதனால் மக்களுடைய வேண்டுகோளை ஏற்று சென்னை செல்லக்கூடிய பயணத்திட்டம் மற்றொரு நாளைக்கு ஒத்தி வைத்துள்ளோம்.

-நாளை தமிழாலும்